லைஃப்ஸ்டைல்

Diabetes : வாழைப்பூ சாப்பிடுங்க..! சர்க்கரை நோய்க்கு குட் பை சொல்லுங்க..!

Published by
லீனா

இன்று பெரும்பாலானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் வயதினர் கூட இந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது நீரிழிவு பிரச்னை ஏற்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்க வேண்டும். ஆனால், இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரப்பதில் சற்று சிரமம் காணப்படும்.

நீரிழிவின் டைப் 1, டைப் 2 என இரண்டு வகை உள்ளது. டைப் 1 வகை நீரிழிவு பொதுவாக குழந்தை பருவத்தில் அல்லது இளம் வயதிலேயே ஏற்படுகிறது. இது உடலில் இன்சுலின் சுரப்பை குறைக்கிறது. டைப் 2 வகை நீரிழிவு வயது வந்தவர்களுக்கு ஏற்படுகிறது. இது இளம் வயதினரை கூட தாக்குகிறது.

நீரிழிவு நோய் பிரச்னை உள்ளவர்களுக்கு அதிகமான தாகம், அளவுக்கு அதிகமான பசி, எடை இழப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், தலைசுற்றல், சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பூ ஒரு சிறந்த உணவாகும்.

வாழைப்பூவில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் வாழைப்பூவை வைத்து கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்

தேவையானவை 

  • பாசிப்பருப்பு – 4 ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – ஸ்பூன்
  • மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  • கடுகு – சிறிதளவு
  • வாழைப்பூ – 1
  • பெருங்காயத்தூள் – சிறிதளவு
  • பூண்டு – 5 பல்
  • வெங்காயம் – 1
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கறிவேப்பிலை

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வாழைப்பூவை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி அதில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வேக விட வேண்டும்.

இதற்கிடையில் மிக்ஸியில் துருவிய தேங்காய் அரை கப் பச்சை மிளகாய் 3 சீரகம் மூன்றையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பூண்டு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை  பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு நறுக்கி வைத்துள்ள வாழைப்பூ, பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பு கலவை கலந்து நன்கு கிளற வேண்டும்.

பின் அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து, அரைத்து வைத்துள்ள கலவையை அதனுள் சேர்க்க வேண்டும். பின்பு அதனை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இறக்கிய பின் அதன் மேலாக கொத்தமல்லி தழை தூவி பரிமாற வேண்டும்.

நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை அல்லது ஒரு முறையாவது இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதுடன் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

Published by
லீனா
Tags: DiabetesFood

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago