கோவில் ஸ்டைல்ல புளியோதரை வேணுமா ?அப்போ இந்த பொருளை சேர்த்துக்கோங்க.!

Published by
K Palaniammal

புளியோதரை -கோவிலில் கிடைக்கும் புளியோதரை போல் செய்வது எப்படி என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்;

  • சாதம்= கால் கிலோ அளவு
  • வெல்லம்= அரை ஸ்பூன்
  • கருவேப்பிலை =சிறிதளவு
  • புளி =பெரிய வெங்காயம் சைஸ் அளவு

புளியோதரை பொடி தயாரிக்க

  • கடுகு= ஒரு ஸ்பூன்
  • மிளகு= ஒரு ஸ்பூன்
  • கடலைப்பருப்பு =ஒரு ஸ்பூன்
  • சீரகம்= ஒரு ஸ்பூன்
  • மல்லி =ஒரு ஸ்பூன்
  • எள்ளு= ஒரு ஸ்பூன்
  • வெந்தயம் =கால் ஸ்பூன்

தாளிக்க தேவையானவை

  • நல்லெண்ணெய் =ஆறு ஸ்பூன்
  • கடுகு =ஒரு ஸ்பூன்
  • உளுந்து= ஒரு ஸ்பூன்
  • கடலைப்பருப்பு= ஒரு ஸ்பூன்
  • வேர்கடலை =ஒரு கைப்பிடி அளவு
  • காய்ந்த மிளகாய் =10
  • பெருங்காயம்= ஒரு ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் =கால் ஸ்பூன்
  • மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன்

செய்முறை;

முதலில் சாதத்தை இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கட்டி இல்லாமல் கிளறி ஆற வைத்துக் கொள்ளவும் .புளியையும் ஊறவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மிளகு ,சீரகம், எள்ளு, கடுகு, மல்லி, மிளகாய், கருவேப்பிலை சிறிதளவு வெந்தயம் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து பவுடர் ஆக்கிக் கொள்ளவும்.

இப்போது மற்றொரு பாத்திரத்தில் ஆறு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து, கடலை பருப்பு சிறிதளவு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் 5 சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையும் சேர்த்து வறுத்து பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.[ இப்படி தண்ணீரில் கரைத்து சேர்க்கும்போது புளியோதரையின் சுவை அதிகமாகும்].

அதனுடன் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் துளையும் சேர்த்து கலந்து இப்போது ஊற வைத்துள்ள புளி  கரைசலையும் சேர்த்துக் கொள்ளவும் .தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரையும் சேர்த்து கலந்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும். புளி கரைசல் கெட்டியாகி தேன் பதத்திற்கு வந்த பிறகு புளியோதரை பொடியை இரண்டு ஸ்பூன் சேர்த்து கலந்து விட்டு இரண்டு நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

இப்போது அரை ஸ்பூன் வெல்லம்  சேர்த்து இறக்கி விடவும். இந்த புளி கரைசல் ஆரிய பிறகு சாதத்தில் இரண்டு ஸ்பூன் புளியோதரை பொடி சேர்த்து உங்களுக்கு தேவையான அளவு புளி கரைசலையும் சேர்த்து கிளறி கொள்ளவும் .இப்போது மணக்க மணக்க கோவில் புளியோதரை தயார். புளியோதரையை எப்போதும் போல் செய்யாமல்  எள்ளு, வெல்லம் மற்றும் வெந்தயம் இவற்றை மறக்காமல் சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

Recent Posts

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

49 minutes ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

3 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

4 hours ago

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

5 hours ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

5 hours ago