லைஃப்ஸ்டைல்

தினமும் ஒரே பருப்பில் சாம்பார் செய்கிறீர்களா.? இதோ அதற்கான மாற்றுத் தீர்வு ரெடி…

Published by
K Palaniammal

எப்போது பார்த்தாலும் பருப்பு சாம்பார் என பல குடும்பங்களில் முதல் உணவாக உள்ளது. நாம் ஒரே வகையான பருப்புகளை உபயோகிக்கும் போது உடலில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அதற்கு மாற்றாக நாம் என்ன பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

காலையில் இட்லியில் தொடங்கி மதியம் சாம்பார், இரவு சப்பாத்திக்கு சாம்பார் என்று பல குடும்பங்களில் உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் ஒரே பருப்பில் செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் விருந்து நிகழ்ச்சிகளிலும் நம் தென்னிந்திய உணவுகளில் தவிர்க்க முடியாத ஒன்று பருப்பு சாம்பார்.

பருப்பில்  பிரச்சனை இல்லை ஆனால் இங்கு நாம் ஒரே வகையான பருப்பை தான் பயன்படுத்துகிறோம். இதிலும் குறிப்பாக துவரம் பருப்பு தான் 90 சதவீதம் மெஜாரிட்டியாக உள்ளது.

ஒரே பருப்பை நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் உடல் பருமன், வாயு தொந்தரவு,அதிக படியான  புரதம் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் துவரம் பருப்பின் விலையும் ஏற்றப்படுகிறது. நாம் ஒரே பருப்பை வாங்கும் போது அதன் பற்றாக்குறை ஏற்படுகிறது இதனால் விலை ஏற்றப்படுகிறது. இதற்கு மாறாக  பல சத்தான பருப்புகள்  உள்ளது.

கொள்ளு பருப்பு

இந்தப் பருப்பை நாம் வாரம் இரண்டு முறை  பயன்படுத்த வேண்டும் இதனால் நம் உடம்பில் உள்ள கொழுப்பு குறைக்கப்படுகிறது. உடல் எடையும் குறைக்கப்படுகிறது. இந்தக் கொள்ளு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் சூட்டை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க கொள்ளு பயன்படுத்தும் போது நீர் காய்கறிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

அவரைப் பரப்பு

இதுவும் துவரப்பருப்புக்கு இணையான சத்துக்களை கொண்டுள்ளது. இந்தப் பருப்பு அதிகம் பயன்படுத்தும் போது வாய் தொந்தரவை ஏற்படுத்தும் இதனால் வாரம் ஒரு முறை பயன்படுத்துவது சிறந்தது. இந்த பருப்பை வேகவைக்கும் போது முழு பூண்டை சேர்த்து வேக வைக்க வேண்டும்.

தட்டைப் பயிறு

பெரும்பாலும் மக்களிடையே பயன்படுத்தப்படாத ஒரு பருப்பு வகை இந்த தட்டைப் பயிர் தான். ஆனால் துவரம் பருப்பை விட அதிக சத்துக்களை கொண்டது விலை குறைவானது. அதுமட்டுமில்லாமல் மிகவும் சுவையானது மனம் உள்ளது. இதனை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது மூட்டுவாதம் தடுக்கிறது. வாரத்திற்கு ஒரு முறையேனும் நம் உணவில் பயன்படுத்த வேண்டும்.

பாசிப்பயிறு

பாசிப்பயறில் அதிகப்படியான நல்ல புரதங்களைக் கொண்டுள்ளது. மேலும் போலிக்  ஆசிட், விட்டமின்ஸ், நிறைந்துள்ளது. இதன் மேல் தோலில் கரோட்டின் சத்து காணப்படும். அதனால் அதன் தோலை நீக்காமல் நாம் சமைத்து உண்ண வேண்டும்.

ஆகவே இந்த பதிவை நீங்கள் அறிந்த பிறகு உங்கள் மளிகை குறிப்பில் ஒரு கிலோ துவரம் பருப்பை அரை கிலோவாக குறைத்து மீதம்  அரை கிலோ இந்த பருப்பு வகைகளை நாம் உணவில் எடுத்துக்கொண்டு பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

Published by
K Palaniammal

Recent Posts

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

15 minutes ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

1 hour ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

2 hours ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

2 hours ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

3 hours ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

3 hours ago