லைஃப்ஸ்டைல்

Piles : உங்களுக்கு இந்த பிரச்னை உள்ளதா..? அப்ப இதை கண்டிப்பா படிங்க..!

Published by
லீனா

மூலம் (Piles) என்பது ஆசனவாயின் உட்புற அல்லது வெளிப்புற திசுக்களில் வீக்கம் ஏற்படுவது ஆகும். இது ரத்த நாளங்கள் வீக்கமடைந்து, திசுக்களின் வழியே தள்ளப்படுவதால் ஏற்படக்கூடிய ஒரு பிரச்னை ஆகும். மூலம் பிரச்சனை இரண்டு வகைப்படும். அவை, உள் மூலம், வெளி மூலம் ஆகும்.

அறிகுறிகள் 

மூலம் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆசனவாயில் வலி அல்லது அரிப்பு ஏற்படலாம். இந்த வலி மற்றும் அரிப்பு மலம் கழிக்கும் போது அவர்களுக்கு சில மோசமான சூழ்நிலைகளை ஏற்படுத்தலாம். மூலம் பிரச்சனை உள்ளவர்களுக்கு  மலச்சிக்கலுடன் சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் ரத்தப்போக்கு ஏற்படலாம்.

தீவிரமான வலி, ரத்தப்போக்கு, சீழ்க்கட்டி, ஆசனவாய் புண் போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

செய்ய வேண்டியவை 

மூலம் பிரச்சனை உள்ளவர்கள், ஆசனவாயில் ஐஸ் பேக் வைக்கலாம், ஆசனவாயில் மலமிளக்கியை தடவலாம், ஃபைபர் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம், போதுமான அளவு திரவங்கள் அருந்த வேண்டும். மூலத்தை சரிசெய்ய பல சிகிச்சைகள் உள்ளது. வீட்டு வைத்தியம், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

சாப்பிட வேண்டிய உணவுகள் 

மூலம் பிரச்சனை உள்ளவர்கள் ஆப்பிள், பேரிக்காய், அன்னாசி, பிளம்ஸ், பீன்ஸ், பட்டாணி, ப்ரோக்கோலி, கேரட், முட்டைக்கோஸ், வெள்ளரி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போன்ற ஃபைபர் நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம்.

ஓட்ஸ், கம்பு, பழுப்பு அரிசி, கோதுமை தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற முழு தானியங்களை சாப்பிடலாம். பீன்ஸ், பட்டாணி மற்றும் லெண்டில்ஸ் போன்ற பருப்பு வகைகளை சாப்பிடலாம்.

சாப்பிட கூடாத உணவுகள் 

ஆல்கஹால் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் மலச்சிக்கலை ஏற்படுத்தும், இது மூலத்தின் அறிகுறிகளை மோசமாக்கும். காபி மற்றும் தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.  வறுத்த உணவுகள் மற்றும் காரமான உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும். பால் மற்றும் பால் பொருட்கள் சிலருக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் அதனையும் தவிர்க்க வேண்டும்.

மூலத்தை தவிர்க்க சில குறிப்புகள் 

மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்ததும் மலம் கழிக்க வேண்டும். மலம் கழிக்க நீண்ட நேரம் காத்திருப்பது மலசிக்கல் பிரச்னையை ஏற்படுத்தும். மலம் கழிக்கும் போது அதிக அழுத்தம் கொடுப்பது, மூலம் சம்பந்தமான பிரச்னைகளை ஏற்படுத்தும். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

மேற்கண்ட செயல்முறைகளை கையாண்டால் மூலம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ளலாம்.

Published by
லீனா

Recent Posts

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

1 hour ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

3 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

4 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

4 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

5 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

5 hours ago