நாம் பிரட்டை பயன்படுத்தி பல விதமான உணவுகளை செய்து சாப்பிட்டிருப்போம். அதே பிரட்டை பயன்படுத்தி, பிரட் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நாம் பிரட்டை பயன்படுத்தி பல விதமான உணவுகளை செய்து சாப்பிட்டிருப்போம். தற்போது இந்த பதிவில் அதே பிரட்டை பயன்படுத்தி, வித்தியாசமான முறையில் பிரட் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். பிரௌன் பிரட்டை எடுத்து சிறுசிறு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி இலை, அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் சோயா சாஸ், ஒரு டீஸ்பூன் சில்லி சாஸ் ஊற்றி எல்லாவற்றையும் கலந்து நன்கு கலவையாக செய்து கொள்ள வேண்டும்.
பின் அதில் மூன்று முட்டையை உடைத்து ஊற்றி தனை நன்கு கலக்க வேண்டும். அதன் பின் ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை வாணலியில் ஊறுவதற்கு முன்பதாக நறுக்கி வைத்துள்ள பிரெட்டை கலவையில் கலந்து கொள்ள வேண்டும்.
பின் இரண்டையும் நன்கு கலந்து அதன் பின்னர் வாணலியில் போட வேண்டும். அதனை மெதுவாக கிளறி விட வேண்டும். முட்டை பொரிந்து பொன்னிறமாக வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். இப்போது சுவையான பிரட் பொரியல் தயார்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…