சைக்கிள் ஓட்டுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!

Published by
Rebekal

சைக்கிள் ஓட்டுவது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் நமது உடல்நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த சைக்கிள் தொடர்ச்சியாக ஓட்டுவதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்த பிறகு சைக்கிள் தற்பொழுது பயன்பாடற்ற ஒரு பொருளாக மாறி விட்டது. ஆனால் இந்த சைக்கிளை நான் ஓட்டும் போது இதயத் துடிப்பு சீராக உதவுவதுடன் வயது முதிர்வு காரணமாக ஏற்படக்கூடிய இதய நோய்கள், இதய வலுவிழப்பு மற்றும் இதய அடைப்பு போன்றவற்றை தடுக்க பயன்படுகிறது. டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் கால் தசை, தொடைப் பகுதி தசைகள், இடுப்புப் பகுதி போன்றவை வலிமை பெற உதவுவதுடன் மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த சைக்கிளை தொடர்ச்சியாக ஓட்டலாம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் பாதுகாப்பதுடன் மூளையின் செயல்திறனை அதிகரித்து உடல் நோயற்று காணப்பட உதவுகிறது. மனதளவில் புத்துணர்ச்சி கொடுக்க உதவுவதுடன் மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றை நீக்கவும் அதிக வியர்வையை வெளியில் கொண்டு வரவும் உதவுகிறது. இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும். மேலும் மார்பக புற்றுநோய் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பது உடல் பருமன் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

Published by
Rebekal
Tags: cycleCycling

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago