எப்பொழுதுமே நீங்கள் சரியாக கழுவாத உடல் பாகங்கள் என்னென்ன தெரியுமா?

Published by
Soundarya

நம்மில் ஒவ்வொருவரும் பொதுவாகவே குளிக்கும் பொழுது உடலில் சில பாகங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் அன்றாட நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி அறிந்திருந்தும் கூட, நம் அவசர உலகம் – நம் அவசர மனநிலை நம்மை சரியாக எந்த செயல்களையும் ஆற்ற விடுவதில்லை.

இந்த பதிப்பில், எப்பொழுதுமே நாம் ஒவ்வொருவரும் அதிக முக்கியத்துவம் கொடுத்து சரியாக கழுவாத உடல் பாகங்கள் என்னென்ன, அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று காணலாம்.

கைகள்

கைகளை சமைக்கும் பொழுது, சாப்பிடும் முன், சாப்பாட்டிற்கு பின் என முக்கிய தருணங்களின் பொழுது நன்கு கழுவுதல் வேண்டும். ஆனால், நம்மில் எவரும் இதை சரியாக செய்வதில்லை.

சரியாக கழுவப்படாத கைகளால் தீவிர நோய்த்தொற்றுகள் தாக்கும் அபாயம் உண்டு. குளிக்கையிலும் கைகளை நன்கு கழுவுதல் வேண்டும்.

முகம்

முகத்திற்கு அதிக முக்கியத்துவத்தை பெண்கள் அளிப்பர்; இந்நாட்களில் ஆண்களும் முக அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். என்ன தான் ஆணும் பெண்ணும் முக அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், முக ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மிககுறைவு தான்.

அழகிற்காக மேக்கப் போட்டுக் கொள்ளும் நாம், ஆரோக்கியத்திற்காக நன்கு முகத்தை கழுவுவதோ, முகத்தின் சுத்தத்தை பராமரிப்பதோ நமக்கு இரண்டாம் பட்சமாக போய்விட்டது.

தலை – முடியின் வேர்ப்பகுதி

தலைக்கு குளிக்கையில் முடியின் வேர்க்கால்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை; இதனாலேயே முடி உதிர்தல், உடைதல், வளர்ச்சி குன்றுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை நினைவில் கொண்டு, தலையை சுத்தப்படுத்தும் செயலை மேற்கொள்ளுங்கள்.

பற்கள்

பற்களின் மீது அதிக கவனம் செலுத்தாமல் ஏனோ தானோ என்று தான் பற்களை துலக்குகிறோம்; இதனால் பற்களில் பல்வேறு நோய்த்தொற்றுகள் உருவாகி பல்கி பெருகும் அபாயம் உண்டு; இதன் பாதிப்பாகவே பற்களின் மஞ்சள் நிறம், பற்களில் குழி ஏற்படுதல், ஈறுகளில் பிரச்சனை போன்றவை ஏற்படுகின்றன.

காது

நாம் அனைவரும் சுத்தமாக கண்டுகொள்ளாத மற்றொரு உறுப்பு காது; குளிக்கும் பொழுது காதில் தேய்த்த சோப்பைக் கூட சுத்தமாக கழுவுவதில்லை பெரும்பாலோனோர். காதுகளை சுத்தமாக கழுவாமல், பராமரிக்காமல் இருந்தால் செவிடாகும் நிலை கூட ஏற்படலாம்.

பாதம்

பாதங்களை யாரும் சரிவர பராமரிப்பதில்லை; பாதங்கள் இல்லையெனில் நாம் அனைவரும் அசையாத பொருட்கள் போல் ஒரே இடத்தில் இருக்க நேரிடும் என்ற உண்மையை உணர்ந்து பாதங்களின் சுத்தத்தில் இனியாவது கவனம் செலுத்துவோமாக.

தொப்புள்

கருவில் உருவான நிமிடத்தில் இருந்து பிறப்பது வரை மிக முக்கியமான உறுப்பாக விளங்குவது தொப்புள் ஆகும்; தொப்புளை அடிக்கடி அல்லது குறைந்தபட்சம் இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்வது உடல் நலத்திற்கு நல்லது.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago