thayir vadai
தயிர் வடை -மெது மெதுவென தயிர் வடை செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.
முதலில் உளுந்தை கழுவி 1மணி ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு தயிரை தயாராக செய்து வைத்துக் கொள்ளவும். தயிருடன் 200ml காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும். இவ்வாறு பால் சேர்க்கும் பொழுது தயிர் வடை நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும்.
இப்பொழுது ஊற வைத்துள்ள உளுந்தை பந்து போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். கையில் எடுத்தால் பந்து போல உருட்ட வரவேண்டும். கையில் மாவு ஒட்டக்கூடாது இதுதான் சரியான பதம் ஆகும். அரைத்த மாவில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, இஞ்சி ,பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வடை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைத்துக் கொள்ளவும் எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாக தட்டி பொரித்து எடுக்கவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் இரண்டு வரமிளகாய், சிறிது கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .இந்த தாளிப்பு ஆறிய உடன் தயிரில் கலந்து கொள்ளவும்.
பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் செய்து வைத்துள்ள உளுந்த வடைகளை சேர்த்து அதற்கு மேல் தயிரையும் ஊற்றி 20 நிமிடங்கள் ஊற வைத்து விட வேண்டும். இப்போது சுவையான மிருதுவான தயிர்வடை ரெடி.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…