பிரியாணி சுவையாக இருக்க இந்த ஒரு பொருளை சேர்த்துக்கோங்க..!

Published by
K Palaniammal

Chicken Biriyani -குக்கரில் பிரியாணி குழையாமல் இருக்கவும் ,பிரியாணி சுவையாக இருக்கவும் எப்படி செய்யலாம் என இப்பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் =அரை கிலோ
  • அரிசி =2 கப் [அரைகிலோ ]
  • சின்ன வெங்காயம் =10
  • தக்காளி =6
  • இஞ்சி பூண்டு விழுது =3 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் =2
  • நெய் =3 ஸ்பூன்
  • எண்ணெய் =150 g
  • தயிர் =2 ஸ்பூன்
  • பிரியாணி பொடி =2 ஸ்பூன்
  • சிக்கன் பொடி =2 ஸ்பூன்
  • பிரியாணி இலை 2,கிராம்பு 2,பட்டை 1 இன்ச்,ஏலக்காய் =3
  • புதினா 1 கைப்பிடி  ,கொத்தமல்லி  1 கைப்பிடி
  • சோம்பு =1 ஸ்பூன்

செய்முறை:

முதலில் அரிசியை கழுவி விட்டு ஊற வைக்கவும் ,அப்போதுதான் அரிசி உடையாமல் இருக்கும். குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை சேர்த்து காய்ந்ததும் சோம்பு ,பட்டை ,கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்க்கவும். அதனுடன் வெங்காயம் ,பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை அரைத்து  சேர்த்து வதக்கவும்.

பிரியாணி சுவையாக இருக்க தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ளவும். தக்காளி வதங்கியவுடன் புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும், வதங்கியதும் பிரியாணி மசாலா, சிக்கன் மசாலா ,மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி தயிரை சேர்த்து கலந்து விட்டு சிக்கனை சேர்த்து மசாலா படும்  வரை கிளறிவிட்டு 4  கப் தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து சரி பார்த்துக் கொள்ளவும் .

இப்போது அரிசியை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் குக்கர் மூடி போட்டு இரண்டு விசில் விட்டு மூன்றாவது விசில் வருவதற்கு முன்பே அடுப்பை அணைத்து விடவும். பிறகு விசில் அடங்கியதும் திறந்து பார்த்தால் சுவையாக கமகமவென பிரியாணி தயாராகி இருக்கும்.

Recent Posts

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

29 minutes ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

34 minutes ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

3 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

3 hours ago

பூத் கமிட்டி கருத்தரங்கம்: கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!

கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…

3 hours ago