சென்னையில் கே.பாலசந்தர் நினைவு ‘சதுக்கம்’.. மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.!!

மறைந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் நினைவாக சென்னையில் சதுக்கம் என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.

சென்னை மாநகராட்சியின் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது.  இந்த கூட்டத்தில் மறைந்த பிரபல இயக்குனரான கே.பாலச்சந்தர் நினைவாக,  சென்னை ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் உள்ள காவிரி மருத்துவமனை அருகில் 1,000 சதுர அடி அளவில் உள்ள போக்குவரத்து தீவு இடத்திற்கு கே.பாலச்சந்தர் சதுக்கம் என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த கூட்டத்தில் மொத்தம் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும், ஏற்கனவே மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அவ்வை சண்முகம் சாலை வி.பி.ராமன் சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது மறைந்த பிரபல இயக்குனரான கே.பாலச்சந்தர்க்கு 1,000 சதுர அடியில் சதுக்கம் ஏற்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.