பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க..! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

Published by
கெளதம்

IBPS CLERKS : இந்த ஆண்டு இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் (ஐபிபிஎஸ்) எழுத்தர் (Clerk) பரிவில், மொத்தம் 6128 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்.

அதில், தமிழகத்தில் மட்டும் 665 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இதற்கு தகுதி உள்ளவர்கள் இன்று (ஜூலை 1) முதல் விண்ணப்பிக்கலாம், ஜூலை 21ம் தேதிக்குள் http://ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் ஐபிபிஎஸ் நிர்ணயித்த தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, SC/ST மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்காக உதவும் விதமாக, இத்தேர்வுக்கான பயிற்சி ஆகஸ்ட் 12 முதல் 17ம் தேதி வரை வழங்கப்படும்.

கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(அல்லது) வேறு ஏதேனும் உயர்கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 20 வயதுக்கு குறைவாக இருக்கக்கூடாது, அதேபோல் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC, ST, PwBD, ESM, DESM பிரிவினருக்கு – ரூ.175 எனவும், மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் – ரூ.850 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்

பரோடா வங்கி, இந்தியா வங்கி, மகாராஷ்டிரா வங்கி, கனரா வங்கி, மத்திய இந்தியா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிண்ட் வங்கி, யூகோ வங்கி, யூனியன் இந்தியா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

2 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

3 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

4 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

4 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

5 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

7 hours ago