தமிழக முதல்வர் அலுவலக வேலை.. 25 இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடங்கள்.!

Published by
கெளதம்

TNCMFP ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்திற்கு (2024-26) தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அதன்படி, 25 இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தமிழ்நாடு அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசில் வேலைக்கு சேர விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை சரியாக படித்துக்கொண்டு இந்த பணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tn.gov.in/tncmfp/என்கிற இணையத்தில் விண்ணக்கவும்.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பம் தொடங்கிய தேதி 06.08.2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 26.08.2024
முதற்கட்ட மதிப்பீட்டுத் தேர்வுக்கான இ-டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யும் நாள் 05.09.2024
முதற்கட்ட தேர்வு நாள் 15.09.2024
விரிவான தேர்வு நாள் செப்டம்பர் 2024 கடைசி வாரம்
நேர்காணல் தேர்வு நாள் அக்டோபர் 2024 கடைசி வாரம்
புத்தாய்வு திட்டம் துவக்கம் நவம்பர் 2024

காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :

  • இளம் தொழில் வல்லுநர்கள் – 25

துறைகள்:-

  1. நீர்வளங்களை மேம்படுத்துதல்
  2. வேளாண் உற்பத்தி, விளைச்சல் மற்றும் சந்தைப்படுத்துவதற்குரிய இணைப்புகளை உருவாக்குதல்.
  3. ஊரக மற்றும் நகர்ப்புர குடியிருப்புக்கள்
  4. கல்வித் தரத்தை உயர்த்துதல்
  5. சுகாதாரக் குறியீடுகளை மேம்படுத்துதல்
  6. அனைவருக்கும் உள்ளடங்கிய சமூகம் (Social Inclusion)
  7. உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி
  8. திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு
  9. முறையான கடன்
  10. இளைஞர் நலன்
  11. சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் பருவநிலை மாற்றம்
  12. தரவு நிர்வாகம்

கல்வித் தகுதி:

  • (பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை அறிவியல்) அல்லது கலை /அறிவியலில் முதுகலைப் பட்டத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • பணி அனுபவம் கூடுதல் அனுகூலமாக கருதப்படும்.
  • ஆராய்ச்சி அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • தமிழ்மொழி பயன்பாட்டுத் திறன் கட்டாயமானது.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரரின் வயது 26.08.2024 ன்படி, 22-30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 33 ஆகவும் இருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் 2022-24ல் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 30 புத்தாய்வு வல்லுநர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லை.

சம்பளம் :

இப்புத்தாய்வுத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் வல்லுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.65,000 மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கான பயணச் செலவு, கைப்பேசி மற்றும் தரவு பயன்பாடு போன்ற செலவினத்திற்காக மாதம் ரூ.10,000 கூடுதல் தொகையாக வழங்கப்படும். இவற்றைத் தவிர கூடுதல் நிதி உதவி எதுவும் வழங்கப்படமாட்டாது.

தேர்வு செயல்முறை:

  1. பூர்வாங்க மதிப்பீடு (கணினி அடிப்படையிலான சோதனை)
  2. விரிவான தேர்வு (எழுத்துத் தேர்வு)
  3. தனிப்பட்ட நேர்காணல்

விண்ணப்பம் செய்வது எப்படி? 

  1. இணையவழி விண்ணப்பங்களை https://www.tn.gov.in/tncmfp அல்லது www.bim.edu/tncmfp என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  2. இணையதள விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 26.08.2024 ஆகும்.
  3. இதற்கான விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை.
  4. இணையவழி வாயிலாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக்
விண்ணப்ப படிவம் க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
Published by
கெளதம்

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

8 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

8 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

8 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

9 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

9 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

9 hours ago