வேலைவாய்ப்பு

மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்..! வருவாய் துறையில் வேலை…உடனே விண்ணப்பிங்க..!

Published by
செந்தில்குமார்

நிதி அமைச்சகம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சகத்தின் (Ministry of Finance) கீழ் உள்ள வருவாய் துறையில் (Department of Revenue) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருவாய் துறையில் பணி புரிவதற்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் ஆள்சேர்ப்புக்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து விட்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் மற்றும் வயது:

வருவாய் துறையில் காலியாக உள்ள திறமையான நிர்வாக அதிகாரி (Competent Authority & Administrator) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரரின் வயது குறித்த தகவல் அறிவிப்பில் தரப்படவில்லை.

விண்ணப்பதாரரின் தகுதி:

  • SAFEMA- இந்திய அரசாங்கத்திற்கு JS பதவிக்குக் குறையாத மத்திய அரசின் அதிகாரிகள்.
  • NDPSA- சுங்க ஆணையர் அல்லது மத்திய கலால் ஆணையர் அல்லது வருமான வரி ஆணையர் அல்லது அதற்கு இணையான பதவியில் உள்ள மத்திய அரசின் அதிகாரி.
Ministry of Finance Recruitment 2023 [Image Source : Ministry of Finance]

பதவிக்காலம் :

மேற்கண்ட பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார்.

எப்படி விண்ணப்பிப்பது.?

  • மேற்கண்ட பணிக்குஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து Application Form விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
  • அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போல உரிய ஆவணங்களுடன் முறையாகப் தவறில்லாமல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை எண்.51-II, வருவாய்த் துறை, நிதி அமைச்சகம், நார்த் பிளாக், புது தில்லி-110001 என்ற முகவரிக்கோ அல்லது gaurav.mehra85@nic.in அல்லது kishan.kumar88@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.
  • எந்த ஆன்லைன் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

தேர்வு முறை:

வருவாய் துறையில் பணியாற்றுவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களை அறிய https://dor.gov.in/vacancies-circulars அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.

சம்பளம் மற்றும் கடைசி தேதி:

வருவாய் துறையில் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,44,200 லட்சம் முதல் ரூ.2,18,200 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் Application Form விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஜூன் 23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கடைசி தேதி முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

6 minutes ago

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

27 minutes ago

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

56 minutes ago

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

1 hour ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

3 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

3 hours ago