12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோயம்புத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.!

Published by
கெளதம்

உதவியாளருடன் இணைந்த Data Entry ஆட்சேர்ப்பு : கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடத்தை நிரப்ப தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களின் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் நாளை (ஜூலை 9) மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்னும் ஒரு நாள் சில மணி நேரங்களே உள்ளதால், கோவையில் வேலை தேடிக்கொண்டிருக்கும்  தகுதியுடைய நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி 26.06.2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.07.2024

காலியிடங்கள் விவரம் :

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (குறிப்பு எத்தனை காலியிடங்கள் என குறிப்பிடப்படவில்லை)

சம்பளம் 

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவருக்கு சம்பளமாக ரூ.13,240/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அடிப்படை தகுதி

  • அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை (Typewriting Tamil and English Senior Level) முடித்திருக்க வேண்டும்.
  • கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர் – 641018 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

குறிப்பு : மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Published by
கெளதம்

Recent Posts

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

2 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

2 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

3 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

4 hours ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

5 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

6 hours ago