வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் அப்ரண்டிஸ் வேலை.! பயற்சி பெற்றுக்கொண்டே மாதச் சம்பளம்…

Published by
கெளதம்

ஹைதராபாத்தில் உள்ள இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர், 70 அப்ரண்டிஸ் பணிக்கான காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன், இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டரால் (NRSC) வெளியிடப்பட்ட NRSC என்ற அதிகாரப்பூர்வ இணையதளயத்திற்கு சென்று படிக்கவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பிஇ, பிடெக், டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சிக்கான வயது:

குறைந்தபட்ச வயது 15 முதல் அதிகபட்ச வயது வரம்பு 24 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

பதவிகள்:

கிராஜுவேட் அப்ரெண்டிஸ், டெக்னீசியன் அப்ரண்டிஸ், டிப்ளமோ அப்ரெண்டிஸ்.

சம்பளம்:

கிராஜுவேட் பயிற்சியாளர்களுக்கு 17 காலி பணியிடங்கள் உள்ளது. அவர்களுக்கு மாதம் ரூ.9000, டெக்னீசியன் பயிற்சியாளர்களுக்கு 30 காலி பணியிடங்கள் உள்ளது. அவர்களுக்கு மாதம் ரூ.8000, டிப்ளமோ பயிற்சியில் 23 காலி பணியிடங்கள் உள்ளது அவர்களுக்கு மாதம் ரூ. 8000 சம்பளம் வழங்கபடுகிறது.

துறைகள்:

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கமர்ஷியல் மற்றும் கம்ப்யூட்டர் பிராக்டீஸ் ஆகியவை அடங்கும்.

கட்டணம் செலுத்தவும் முறை:

விண்ணப்பப் படிவத்தில் உள்ள விவரங்களை விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள பேமெண்ட் கேட்வே மூலம் பயிற்சி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். நெட் பேங்கிங் அல்லது டெபிட் கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்த மே 13 முதல் ஜூன் 2 வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

ஆன்லைன் பதிவு மற்றும் சமர்ப்பிப்பு ஜூன் 2ம் தேதியுடன் முடிவடையும். பயிற்சி விண்ணப்பப் படிவத்தை குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்கத் தவறிய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது, மேலும் இது தொடர்பான கடிதப் பரிமாற்றம் நடத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!

துபாய் : இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் ஒரு போட்டியில் மோதுகிறது என்றாலே அந்த போட்டியின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு…

16 minutes ago

அனுபவத்தில் சொல்லுறேன்..ரசிகர்கள் வேற.. வாக்காளர்கள் வேற! ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

சென்னை : நடிகர் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கி தான் அரசியல் வருவதாக அறிவித்தார்.…

39 minutes ago

SAvAFG : இறுதி வரை போராடிய ரஹ்மத் ஷா! வெற்றியை தட்டி தூக்கிய தென் ஆப்பிரிக்கா!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின.  இந்தப் போட்டி…

9 hours ago

“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்

கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …

10 hours ago

“கடலூருக்கு அசத்தலான 10 முக்கிய அறிவிப்புகள்..,” லிஸ்ட் போட்ட முதலமைச்சர்!

கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …

11 hours ago

“நல்ல கருத்து சொல்ற படம்” மீண்டும் இணையும் டிராகன் கூட்டணி! கண்கலங்கிய பிரதீப்.!

சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…

12 hours ago