சட்டம் படித்தவரா நீங்கள் ..?MPSC சிவில் நீதிபதி வேலை …114 காலியிடங்கள்!

Published by
அகில் R

MPSC ஆட்சேர்ப்பு 2024 : மகாராஷ்டிரா பொது சேவை ஆணையம், 114 சிவில் நீதிபதிகளை பணியமர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான mpsc.gov.in இல் விரிவான தகவல்களைக் கண்டுபிடித்து இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஜூன் 24, 2024 அன்று தொடங்கியது மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 8, 2024 ஆகும்.

கல்வி தகுதி & வயது வரம்பு :

MPSC அறிவிக்கப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து LL.B./LL.M கட்டாயமாக முடித்திருக்க வேண்டும். மேலும், . ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைந்த பின் பதிவு செய்து அதன்பின் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

முக்கிய தேதிகள் :

விண்ணப்பம் தொடங்கிய தேதி ஜூன் – 24 , 2024
கடைசி நாள் ஜூலை – 12, 2024

தேர்வு நடைமுறை :

முதன்மை மற்றும் நேர்காணலில் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன் பின் முக்கியமாக மெயின்ஸ் தேர்வில் (Mains Exam) 200 மதிப்பெண்களுக்கும், நேர்காணலில் 50 மதிப்பெண்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படும். குறைந்தது 50 % மெயின்ஸ்ஸில் தேர்ச்சி தேர்ச்சி பெற வேண்டும்.

ஆட்சேர்ப்பு ஆணையம் மகாராஷ்டிரா பொது சேவை ஆணையம்
வேலை சிவில் நீதிபதி
காலியிடங்கள் 114
சம்பளம் 27,700 – 44,770
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் (Online)

 

எப்படி விண்ணப்பிப்பது ? 

  • முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான mpsc.gov.in செல்ல வேண்டும்.
  • ஒரு முறை பதிவு செய்யும் (One Time Registration) லிங்க்கை கிளிக் செய்யவும்.
  • பதிவு எண்ணைப் பெற தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
  • வழிமுறைகளை கவனமாக படித்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • சமர்ப்பித்தவுடன், ஒரு தனிப்பட்ட எண்ணை உருவாக்கப்படும்.
  • தேவையான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பித்த  விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து ஒரு நகல் (Xerox) எடுத்து கொள்ள வேண்டும்.
Published by
அகில் R

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

10 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

10 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

10 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

11 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago