#image_title
job vacancy: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் 17 பணிகளுக்கு மொத்தமாக 2329 பணியிடங்கள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் 17 பணிகளுக்கு மொத்தமாக 2329 பணியிடங்கள் உள்ளன.
அதன்படி முதுநிலை கட்டளை பணியாளர், கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை பணியாளர், நகல் வாசிப்பாளர், கட்டளை எழுத்தர், ஓட்டுனர், நகல் பரிசோதகர் , இரவு காவலர் மற்றும் மசால்ஜி, வாட்டர்மென்/வாட்டர்வுமன் மற்றும் ஒளிப்பட நகல் எடுப்பவர் உள்ளிட்ட 17 பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 01.07.2006க்குப் பிறகு பிறந்திருக்கக்கூடாது மற்றும் 01.07.2024 தேதியில் 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அனைத்து பணிகளுக்கும் 10-ம் வகுப்பு கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒளிப்பட நகல் எடுப்பவர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கு முன் அனுபவம் தேவைப்படுகிறது. விண்ணப்பிக்க உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தங்கள் மாவட்டங்களை தேர்வு செய்து அங்குள்ள உள்ள காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படு உள்ளனர். விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 27.05.2024-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவேண்டும்.
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…