சித்தி 2 தொடரில் இனி முதல் ராதிகாவிற்கு பதில் நடிப்பது இந்த முன்னணி நடிகையா.? அவரே அளித்த விளக்கம்.!

சித்தி-2 தொடரில் இனி முதல் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று வரலட்சுமி மறுத்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தொடர் ராதிகாவின் சித்தி . சமீபத்தில் அதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது.அதில் நடித்து வந்த ராதிகா சமீபத்தில் தேர்தலில் மும்மரமாக ஈடுபட உள்ளதால் சித்தி-2 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது சித்தி-2 தொடரில் இனி ராதிகாவிற்கு பதில் யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.அதன்படி சித்தி-2 தொடரில் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் இனிமுதல் ரம்யா கிருஷ்ணன் அல்லது தேவயானி அல்லது மீனா நடிக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது .அதன் பின் தற்போது சித்தி -2 சீரியலில் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் இனி முதல் வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று உலா வருகிறது.இது குறித்து வரலட்சுமி தரப்பிலிருந்து கூறியுள்ளதாவது,சித்தி-2 தொடரில் தான் நடிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று கூறி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உண்மையில் சித்தி 2 தொடரில் இனி முதல் யார் நடிப்பார் என்பது சன் டிவி வாய் திறந்தால் தான் தெரிய வரும்.