எனது 14 ஆவது வயதில் நான் பலாத்காரம் செய்யப்பட்டேன் என வெளிப்படையாக நடிகர் அமீர்கானின் மகள் ஐரா கூறியுள்ளார்.
முன்பெல்லாம் பெண்கள் தங்களுக்கு நடந்த குற்றங்களை வெளியில் சொல்ல தயங்குவார்கள். ஆனால், தற்பொழுது அப்படி அல்ல ஆண்களை விட பெண்கள் தான் துணிச்சலுடன் எதையும் பேசுகிறார்கள். அண்மை காலங்களாகவே திரையுலகினை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களின் வாழ்வில் நடந்த அத்துமீறல்கள் குறித்து தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒன்றாக தற்பொழுது நடிகர் அமீர்கானின் மக்கள் ஐரா தான் 14 வயதில் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவியில், தன்னை சீண்டியவர் இது தவறு என தெரிந்து தான் செய்கிறாரா என்பதை புரிந்துகொள்ள எனக்கு 1 வருடம் எடுத்துக்கொண்டது. புரிந்ததும் எனது பி[ஏற்றோர்களிடம் கூறினேன் அவர்கள் என்னை அந்த சூழலில் இருந்த்து காப்பாற்றிவிட்டார்கள், விவாகரத்து பெற்றிருந்தாலும் அதன் தாக்கம் தெரியாமல் எனது பெற்றோர்கள் என்னை கவனித்து கொள்கிறார்கள் எனவும் ஐரா தெரிவித்துள்ளார்.