இதை செய்யும் நேரத்தில் தான் நான் அதிக மகிழ்ச்சியாக உணர்கிறேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் சமையல் செய்யும் பொழுது தான் அதிக இன்பம் கொள்வதாகவும், தனது கவலையை மாற்றக் கூடிய ஒன்றாக சமையல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரக்கூடிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாகிய இவர், அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து கலக்கி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இவர் தற்பொழுது தனது சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில், தான் சமைக்கும் பொழுது தான் இன்பமாகவும் கவலைகள் மறந்தும் காணப்படுவதாக கூறியுள்ளார். இதன் மூலம் அவர் தனக்கு சமையலின் மீது உள்ள காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal