எனது ஐபிஎல் பணத்தை எடுத்து பெற்றோருக்காக இதை செய்ய போகிறேன் – மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மா..!

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 15 ஆவது சீசன் 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரராக இளம் வீரர் திலக் வர்மா அவர்கள் விளையாடி வருகிறார்.

தனது பேட்டிங் மூலமாக பலரையும் கவர்ந்துள்ள திலக் அட்டகாசமாக தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்பொழுதும் இவர் தனது ஐபிஎல் சம்பளத்தில் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து பேசியுள்ளார்.

முன்னதாக பிப்ரவரி மாதம் நடந்த ஐபிஎல் 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் 1.7 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக் வர்மா சேர்ந்தார். இந்த தொகையை வைத்து தனது பெற்றோருக்கு வீடு வாங்கி கொடுக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என கூறியுள்ளார்.

அதாவது தங்களுக்கு இன்னும் ஒரு சொந்த வீடு கிடையாது எனவும், ஐபிஎல் மூலம் சம்பாதித்ததை வைத்து எனது பெற்றோருக்கு சொந்த வீடு வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal