இன்று நிலவில் தரையிறங்கிய முதல் மனிதரின் பிறந்தநாள்!

Published by
லீனா

நீல் ஆம்ஸ்ட்ராங் ஒரு அமெரிக்க விண்வெளி வீரர் ஆவார். சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். இவர் ஆகஸ்ட், 5-ம் தேதி, 1930-ம் ஆண்டு ஓஹியோவில் உள்ள வாப்கோநெட்டாவில் பிறந்தார். இவர் வான்வெளி பொறியியலாளர், கப்பற்படை விமானி, வெள்ளோட்ட விமானி மற்றும் பல்கலை கழக பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

இவர் தேசிய வானூர்தி ஆலோசனை செயல்குழுவின் அதிவேக விமான நிலையத்தில், வெள்ளோட்ட விமானியாக பணிபுரிந்தார். அதற்கு முன்பு, ஐக்கிய அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக இருந்தார். நீல் ஆம்ஸ்ட்ராங் 900-க்கும் மேற்பட்ட விமானங்களை ஓட்டியுள்ளார்.

இவர் 1969-ல் ஜூலை 20-ல் அமெரிக்காவின் அப்போல்லோ-11 விண்கலத்தில்  எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கெலின்ஸ் ஆகியோருடன் இணைந்து பயணித்த ஆம்ஸ்ட்ராங் முதலில் சந்திரனின் காலடி வைத்தார். இவரை தொடர்ந்து அல்ட்ரினும் சந்திரனில் காலடி வைத்தார். இவர் சந்திரனின் காலடி வைத்த போது, தனது இடது காலையே முதலில் வைத்தார்.

நீல் ஆம்ஸ்ட்ராங், இருதயத்தின் கரோனரி தமனியில் உள்ள, அடைப்பை சரி செய்வதற்காக இவருக்கு மாற்று பாதை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் திடீரென்று உடலில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 25, 2012-ம் நாள் உயிரிழந்தார்.

Published by
லீனா

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

5 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

40 minutes ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

1 hour ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago