கேரளாவில் ஈ.எம். எஸ். பள்ளி வாசல்…!!

Published by
Dinasuvadu desk

தோழர் ஈ.எம். எஸ்….. கம்யூனிஸ்ட்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்று, வரலாற்றை வளைப்பவர்களுக்கு ஒரு சேதி. அதைத் தெரிந்து கொள்ள, கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், புலாமந்தோள் என்ற ஊருக்கு சென்றால் போதும். அங்கே, வானுயர நிற்கும், ஒரு பள்ளி வாசல், கதை சொல்லும். அப்பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு, உங்களோடு பகிர்ந்து கொள்ள, ஒரு, வரலாற்று நிகழ்வு இருக்கிறது. ஈ.எம். எஸ். என்று, வாஞ்சையுடன்,இன்னும் நினைவு கூரப்படும், தோழர் ஈ.எம். எஸ். அவர்களின், முடிவெடுக்கும் திடமும், சிறுபான்மை மக்கள் மீது அவருக்கிருந்த பரிவும் இதோ:மலபார் ரகளை மற்றும் மாப்பிள்ளை ரகளை என்று, வரலாறு கூறும், பிரிட்டிஷ் எதிர்ப்புப் போரில், இஸ்லாமியர்களின், பங்கேற்பை புரிந்து கொண்ட, ஏகாதிபத்தியம், பள்ளி வாசல்களை புனரமைக்கவோ,உயரமாகக்கட்டவோ தடைவிதித்திருந்தது. 1947-ல் சுதந்திரம் கிடைத்தபிறகும் இது மாறவில்லை. 1957-ல் தோழர். ஈ.எம். எஸ். அவர்கள், கேரள மாநில முதல்வர் ஆன பின்பு, மலப்புறம் சென்றார். அப்போது, பூலாமந்தோள், பள்ளி வாசல் நிர்வாகிகளும், இமாமும்,ஈ.எம். எஸ். அவர்களை நேரில், சந்தித்து, “சகாவே, எங்கள் பள்ளியில், ,தொழுகைக்கு வரும், இறைநம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.

ஆனால், பள்ளி வாசலை இடித்து புனரமைக்கவோ,உயரமாகக்கட்டவோ அனுமதி கிடைக்கவில்லை.சுதந்திரம் கிடைத்தபின்பு, காங்கிரஸ் அரசுகளும் கண்டு கொள்ள வில்லை, நீங்கள் தான் எதாவது செய்ய வேண்டும் “என்றனர். அதற்கு தோழர் ஈ.எம். எஸ். அவர்கள், ,”நான், நாளை, புகைவண்டியில், திருவனந்தபுரம் சென்று, சட்ட மன்றம் செல்லும் வரை அவகாசம் தாருங்கள் “என்று கூறி விடைபெற்றார். மறுநாள்,ஜூலை மாதம்9-ம் தேதி ,மலப்புறம் மட்டுமல்ல, கேரள மாநிலம் முழுவதும் உள்ள, பள்ளி வாசல்களை புனரமைக்கவும், தேவையான அளவில் உயரமாகக்கட்டிக்கொள்ளவும் அனுமதித்து, அரசு உத்தரவு வெளிவந்தது. இப்போதும், அப்பள்ளிவாசல், ஈ.எம். எஸ். பள்ளி வாசல் என்றும், 1957 பள்ளி வாசல் என்றும் அழைக்கப்படுகிறது.

 ஈ. எம். எஸ். நினைவு தினம் இன்று…

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

11 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago