பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் – இந்தியாவின் மூன்று வீரமிக்க தியாகிகள் தூக்கிலிடப்பட்ட நாள்…!!

Published by
Dinasuvadu desk

மார்ச் 23, 1931 பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் – இந்தியாவின் மூன்று வீரமிக்க தியாகிகள் தூக்கிலிடப்பட்ட நாள். தூக்கு தண்டனை மார்ச் 24 தான் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது . எனினும் மக்களின் கடும் எதிர்ப்புக்களை, எழுச்சி மிக்க ஆர்ப்பாட்டங்களை தவிர்க்கும் நோக்கோடு மார்ச் 23ம் நாள் மாலையே தூக்கு தண்டனையை நிறைவேற்றிட சிறை அதிகாரிகள் முடிவு செய்தனர். சிறைக் காவலர்கள் பகத்சிங்கை அழைத்துச்செல்ல நெருங்கினார்கள் அப்போது அவன் மெய்மறந்து ஒரு நூலை வாசித்துக் கொண்டிருந்தான். அது – “லெனினின் அரசும், புரட்சியும்” அதனை படித்து முடிக்கும்வரை காத்திருக்குமாறு கூறிவிட்டு தனது வாசிப்பைத் தொடர்ந்தான். பிறகு மூவரும் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தங்களது இறுதி ஆசை – தூக்கிலிடப்படுவதற்கு பதிலாக துப்பாக்கியால் சுடப்படவேண்டும் எனத் தெரிவிக்கிறார்கள் – ஆனால் ஆங்கிலேய அதிகரிகள் அதனை ஏற்கவில்லை. தூக்குமேடையில் நின்று கொண்டு பகத்சிங் “நாங்கள் எத்தனை முறை பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டே இருப்போம்” என வீராவேசமான வார்த்தைகளோடு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் அதிருகிறது. தூக்கிலிடபட்ட பகத்சிங், சுகதேவ்க்கு வயது 23, ராஜகுருவுக்கு 24, தோழர்கள் வாழ்ந்த காலம் கொஞ்சம்தான், ஆனால் பல துறைகளில் கவனம் செலுத்தியதோடு அறிவுஜீவியாகவும் வாழ்ந்தார்கள். வாழ்வின் வசந்தத்தை அனுபவிக்க வேண்டிய வயதில் தூக்கு கயிற்றுக்கு முத்தமிட்ட இவர்களின் கனவு இந்திய விடுதலைக்குப் பின்னராவது நிறைவேறியதா? பல கோடி மக்கள் இன்னமும் வறுமைக்கோட்டிற்கு கீழேயும், கல்வி பெற முடியாமலும், சுகாதாரம், குடிநீர் கிடைக்கும் வழியறியாது அல்லல்படுகின்றனர். சாதி மோதல்களும், வகுப்பு வாதங்களும் தலைவிரித்தாடுகின்றன. பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் – இந்த மூன்று தியாகிகளின் தூக்குக்கும் தியாகத்துக்கும் இன்னமும் இந்த நாடு பதில் சொல்லவில்லை.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago