இன்று சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாள் :
சுப்பிரமணியன் , சுப்பையா என்று அழைக்கப்பட்ட சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதியார் சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11ஆம் தேதி 1882ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம் ) எட்டயபுரத்தில் பிறந்தார்.1887ஆம் ஆண்டு அவரின் தாயார் இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
பாரதியார் தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் போதே தன்னுடைய கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897ஆம் ஆண்டு
பாரதியார் செல்லம்மாள் என்பவரை மணந்தார்.
பாரதியாருக்கு 1898ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.
பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898ஆம் ஆண்டு முதல் 1902ஆம் ஆண்டு வரை
பாரதியார் அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்ட
பாரதியார் எட்டயபுர அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார்.
பாரதியார் 1904ஆம் ஆண்டு மதுரையில் எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.பாரதியார் தமிழ், ஆங்கிலம் , இந்தி , சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர் பாரதியார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…