இன்று இந்திய அணு ஆற்றல் துறையின் தந்தை டாக்டர் ராஜா ராமண்ணாவின் பிறந்த நாள் …!!

Default Image

இன்று இந்திய அணு ஆற்றல் துறையின் தந்தை டாக்டர் ராஜா ராமண்ணாவின் பிறந்த நாள் – ஜனவரி 28, 1925. இராஜா இராமண்ணா இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர். இந்திய அணுக்கரு உலையின் தந்தை எனப் போற்றப்படுபவர்; எழுச்சியூட்டும் தலைவராகவும் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் விளங்கியவர்; இசைக்கலைஞர்; சமற்கிருத இலக்கியம் மற்றும் தத்துவங்களில் மேதையாக விளங்கிய பன்முகத்தன்மை கொண்ட ஓர் முழுமையான மனிதர் எனப்போற்றப்படுபவர்.1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவணத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட ‘சிரிக்கும் புத்தர்’ (Operation Smiling Budhdha)என்ற புனைப்பெயரில் இந்தியாவின் முதல் அமைதியான அணு குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர். கர்நாடக மாநிலத்தின் தும்கூரில் பிறந்தவராயினும் இவர் சென்னை கிருஸ்துவக் கல்லூரி மாணவர் என்பது நமக்குப் பெருமை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்