பயணிகள் கவனத்திற்கு.. இனி சென்னை பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட்..!

UPI: இன்று சென்னை, கிண்டி, போக்குவரத்து ஆணையரகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் போக்குவரத்துத் துறை சார்பில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 புதிய பேருந்துகள் இயக்கத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

READ MORE- கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள்.. நிதியுதவி அறிவித்த முதல்வர்..!

மேலும், மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பாரத் ஸ்டேட் வங்கி உடன் இணைந்து மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலமாக பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.  இந்த திட்டத்தினால் இனி பேருந்துகளில் பயணச்சீட்டு ( Electronic Ticketing Machine) மூலம்  வழங்கப்படும்.

பேருந்து நடத்துநர்கள் Electronic Ticketing Machine வாயிலாக பயணிகளிடம் பணம், CARD மற்றும் UPI மூலம் பணம் பெற்றுக் கொண்டு, பயணச் சீட்டு வழங்குவார்கள். இதனால் பேருந்துகளில் பயணிகள் பணம் எடுத்துச் செல்லாமல் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

READ MORE- அகிலேஷ் யாதவுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ..!

இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு நடைவாரியாகவும் மற்றும் நிலை (ஸ்டேஜ்) வாரியாகவும் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் வசூல் விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்.

போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி,  உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் அமுதா,  மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

author avatar
murugan

Leave a Comment