ஐந்தாவது நாள் பங்குச்சந்தை முடிவு.! 600 புள்ளிக்கு மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.!

இந்தியா பொருளாதாரத்தில் முன்னிலையில் இருந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கின்றன. அதன்படி, கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரத்தில் கடந்த நான்கு நாட்களிலும் சரிவுடனே வர்த்தகமானது.

இந்த சரிவினால் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர். இதனை ஈடு செய்யும் விதமாக இன்றைய வர்த்தக நாள் ஆனது முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. இன்றைய வர்த்தக நாளில் பிள்ளைகளுக்கு மட்டுமே உயர்ந்து வர்த்தகமாகி வந்தது.

இதனால் பல முன்னணி நிறுவனங்களில் பங்குகள் ஏற்றமடைந்தன. அதேபோல நிஃப்டி 19,000 புள்ளிகளை கடந்தது, தற்பொழுது ஐந்தாவது வர்த்தக நாள் ஆனது நிறைவடைந்துள்ள நிலையில், 63,559 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 634.65 புள்ளிகள் உயர்ந்து 63,782.80 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 190.00 புள்ளிகள் உயர்ந்து 19,047.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ், 900.91 புள்ளிகள் குறைந்து 63,148.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதோடு, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 264.90 புள்ளிகள் குறைந்து 18,857.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

மேலும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 2.03 டாலர் விலை உயர்ந்து 89.96 டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 143.00 அல்லது 2.06% உயர்ந்து ரூ.7,088 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் 30 நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களை தவிர மற்ற நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் உயர்ந்துள்ளன.

அதன்படி, ஆக்சிஸ் பேங்க், எச்சிஎல் டெக்னாலஜிஸ்,  டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் பேங்க் உள்ளன ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. ஐடிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக. சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.