தேர்வு முடிவு – டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதில் அளிக்க உத்தரவு!

குரூப் -1 முதல்நிலை தேர்வு முடிவுக்கு தடை கோரிய வழக்கில் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க உத்தரவு.

டி.என்.பி.எஸ்சி குரூப் -1 முதல்நிலை தேர்வு முடிவுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்சி குரூப் -1 முதல்நிலை தேர்வு முடிவு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தடை விதிக்க கோரி திண்டுக்கல்லை சேர்ந்த லட்சுமண் குமார் என்பவர் உயர்நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்