இந்தியா முழுவதும் இன்று 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் தொடக்கம்!

Published by
Venu

இன்று சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்  தொடங்குகின்றன. இந்தியா முழுவதும் 28 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இத்தேர் வை எழுதுகின்றனர்.

10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பொதுத்தேர்வுகள் இந்தியா முழுவதும் இன்று தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வை 4,453 மையங்களில் 16 லட்சத்து 38,552 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களில் 4,510 பேர் மாற்றுத்திறனாளிகள். வெளிநாடுகளில் 78 தேர்வு மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன.

அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 4,138 மையங்களில் 11 லட்சத்து 86,144 பேர் எழுதுகின்றனர். இதில் 2,846 பேர் மாற்றுத்திறனாளிகள். வெளிநாடுகளில் 71 மையங்களில் தேர்வு நடக்கிறது. 10, 12-ம் வகுப்புகளில் மொத்தம் 28 லட்சத்து 24, 696 பேர் தேர்வில் கலந்துகொள்கின்றனர்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் உடல்நலனை கருத்தில்கொண்டு அவர்கள் தேர்வுக்கூடத்துக்குள் திண்பண்டங்கள் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு முதல் முறையாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் லேப்-டாப் மூலம் தேர்வெழுத சிபிஎஸ்இ சிறப்பு அனுமதி அளித்துள்ளது. எனினும் லேப்-டாப்பில் இணைய வசதி இருக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 4-ம் தேதியும் 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 12-ம் தேதியும் நிறைவடைகின்றன. 2011 முதல் 2017-ம் ஆண்டு வரை சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு கட்டாய பொதுத்தேர்வாக நடத்தப்படவில்லை. மாணவர்கள் விரும்பினால் பொதுத் தேர்வாகவும், இல்லாவிட்டால் பள்ளி அளவிலான சாதாரண வருடாந்திர தேர்வாகவும் எழுத அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு முதல் மீண்டும் 10-ம் வகுப்புக்கு கட் டாய பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…

6 mins ago

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…

1 hour ago

லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!

சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…

2 hours ago

மக்களே! தமிழகத்தில் (25.09.2024) புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

2 hours ago

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…

2 hours ago

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…

2 hours ago