போலீசார் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கல்லூரி தாளாளர் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
சாத்தூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார்.
திடீரென தனது மகளைக் காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த பெண்ணை சாத்தூர் பேருந்து நிலையம் அருகே கண்ட போலீசார் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பேருந்து நிலையத்தில் பூக்கடை நடத்திவந்த பாண்டி என்பவரும், வன்னிமடையை சேர்ந்த மாரிமுத்து என்பவரும் தன்னை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் கூறினார்.
மேலும், தனது கல்லூரி தாளாளரும் தன்னை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துவந்ததாகவும் அந்த பெண் தெரிவித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த சாத்தூர் மகளிர் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…