Categories: கல்வி

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு!

Published by
Venu

அடுத்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க AICTE என்ற அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளுக்கான அனுமதி கையேட்டை ஏஐசிடிஇ (AICTE) வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில், சராசரியாக 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கையைக் கொண்ட பொறியியல் பாடப் பிரிவுகளுக்கான அனுமதி இடங்கள் பாதியாக குறைக்கப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ர புத்தே தெரிவித்துள்ளார்.

மாணவர்சேர்க்கை அறவே இல்லாத பாடப்பிரிவுகள் முற்றிலும் நீக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், மாநில அரசிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட்டிருந்தால் மட்டுமே, புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்க அனுமதி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரத்து 291 பொறியியல் கல்லூரிகளில் 51 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததை டுத்து, ஏஐசிடிஇ இந்த முடிவை எடுத்துள்ளது. பொறியியல் படிப்புகளின் தரம் குறைந்து வருவதுடன், மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்காத சூழல் நிலவி வருவதை அடுத்து, தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த ஏஐசிடிஇ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Recent Posts

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…

3 hours ago

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

9 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

10 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

15 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

1 day ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago