வருகிற மே மாதம் 6ம் தேதி எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை தவிற்த்து, நாட்டின் மற்ற அனைத்து பகுதிகளிலும் நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நீட் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”வருகிற மே மாதம் 6ம் தேதி எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை தவிற்த்து, நாட்டின் மற்ற அனைத்து பகுதிகளிலும் நீட் தேர்வுகளை, மத்திய கல்வி வாரியம் நடத்தும். இது தொடர்பாக இதர தேர்வுகள் நடத்தும் அனைத்து அமைப்புகள் மற்றும் வாரியங்களுக்கு நீட் தேர்வு தேதி குறித்து விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதே தேதியில் மற்றொரு தேர்வு நடத்தப்படும் சூழல் நடத்தப்பட்டு, குழப்பம் ஏற்படுவது தவிற்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நடந்த நீட் தேர்வில் பெரும்பாலான வினாக்கள் யாவும் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு கடினமாக இருந்தன.இதனால் தமிழகத்தை சேர்ந்த அரியலூர் மாணவி அனிதா தனது தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். அதனால் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல இடங்களில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…