மே., 6ல் நீட் தேர்வு நடைபெறும் – சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
வருகிற மே மாதம் 6ம் தேதி எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை தவிற்த்து, நாட்டின் மற்ற அனைத்து பகுதிகளிலும் நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நீட் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”வருகிற மே மாதம் 6ம் தேதி எய்ம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை தவிற்த்து, நாட்டின் மற்ற அனைத்து பகுதிகளிலும் நீட் தேர்வுகளை, மத்திய கல்வி வாரியம் நடத்தும். இது தொடர்பாக இதர தேர்வுகள் நடத்தும் அனைத்து அமைப்புகள் மற்றும் வாரியங்களுக்கு நீட் தேர்வு தேதி குறித்து விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதே தேதியில் மற்றொரு தேர்வு நடத்தப்படும் சூழல் நடத்தப்பட்டு, குழப்பம் ஏற்படுவது தவிற்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2018 ஆம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தான் நடத்தப்படும் எனவும் மாநில பாடத்திட்டம் சேர்க்கப்படவில்லை.. – என சிபிஎஸ்இ திட்டவட்டமாக அறிவிப்பு செய்துள்ளது.
கடந்த வருடம் நடந்த நீட் தேர்வில் பெரும்பாலான வினாக்கள் யாவும் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு கடினமாக இருந்தன.இதனால் தமிழகத்தை சேர்ந்த அரியலூர் மாணவி அனிதா தனது தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். அதனால் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல இடங்களில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.