38 C
Chennai
Sunday, June 4, 2023

சொன்னதை செய்து காட்டிய ஹிப்ஹாப் ஆதி…கண்கலங்கிய சூப்பர் சிங்கர் பிரபலம்…நெகிழ்ச்சி வீடியோ இதோ.!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி...

பயணிகள் பாதுகாப்பில் அரசு அலட்சியம்… சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு.!

ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் ஒன்றிய அரசு பயணிகளின்...

ஜனாதிபதி திறக்க வேண்டும் என்பதுதான் திமுக நிலைப்பாடு – அமைச்சர் சேகர் பாபு

ஜனாதிபதி திறப்பது தான் ஏற்புடையதாக இருக்கும் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு என அமைச்சர் சேகர் பாபு பேட்டி.

டெல்லி, சென்ட்ரல் விஸ்டாவில் 970 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றத்தை ஆளும் பாஜக அரசு கட்டி முடித்துள்ளது. இந்த புதிய நாடாளுமன்றமானது வரும் மே 28இல் திறக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த சமயத்தில், புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும்.

ஆனால், அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறி காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பதாக அறிவித்தனர். மேலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நேற்று ரிட் மனுவை தாக்கல் செய்யப்பட்டது. பாஜக அரசு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மேலும், பதவியில் உள்ள ஜனாதிபதி திறப்பது தான் ஏற்புடையதாக இருக்கும் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு எனவும் கூறினார்.