கமல் படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்ட அமீர்! காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே, கார்த்தியை வைத்து பருத்திவீரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் இயக்குனர் அமீர். இவர் இந்த படங்களை எல்லாம் தொடர்ந்து ஜெயம் ரவியை வைத்து ஆதிபகவன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு அந்த சமயம் வரவேற்பை பெறவில்லை என்றே சொல்லலாம்.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அமீர் எந்த படத்தையும் இதுவரை இயக்கவில்லை. அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் என்றால் ஆதிபகவன் தான். ஆனால்,  பருத்திவீரன் படத்தை இயக்கியதற்கு பிறகு அமீருக்கு பிரபல நடிகரான கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

பருத்திவீரன் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட பிரபல இயக்குனர்! அமீர் சொன்ன தகவல்!

ஆனாலும், சில காரணங்கள் கமல்ஹாசனை வைத்து அவரால் படம் இயக்க முடியாமலும் போய் உள்ளது. இந்த தகவலை இயக்குனர் அமீர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் கமல்ஹாசனுடன் 2008 சமயத்தில் ஒரு கதை ஒன்றை கூறி இருந்தேன். நான் கூறிய அந்த கதையும் கமல் சாருக்கு ரொம்பவே பிடித்து இருந்தது.

அந்த திரைப்படத்தை நீங்கள் இயக்குங்கள் நான் என்னுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறேன் என்று கூறினார். எனக்கு அவர் தயாரிக்கிறார் என்றவுடன் பயம் வந்துவிட்டது. எதற்காக பயம் என்றால் யோகி படத்தோட கடைசி க்ளைமாக்ஸ் காட்சி கிட்டத்தட்ட 30நாட்கள் எடுக்கப்பட்டது.

எனவே அதைப்போல ஒரு படத்தை அவரை வைத்து இயக்கும்போது அவருடைய தயாரிப்பிலேயே அந்த படத்தை பண்ணும் போது அவர் கூறும் நாட்களை விட அதிகமாக சென்று விட்டது என்றால்  அவர் மீது வைத்திருக்கும் அன்பு போய்விடுமோ என்ற பயம் எனக்குள் ஏற்பட்டது.  பிறகு நான் உங்களுடைய தயாரிப்பில் வேண்டாம் சார் வேற யாராவது தயாரிக்க வேண்டும் என்பது போல கூறினேன் அதற்கு கமல் சார் உங்கள் கையில் பால் இருக்கிறது நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்பது போல கூறிவிட்டார். பிறகு தான் அந்த படமே வேண்டாம் என்று அப்படியே முடிவெடுக்கப்பட்டது” என அமீர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமீர்- ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாக பெரிய பிரச்சனையாக வெடித்துள்ள காரணத்தால் அமீர் சமீபகாலமாக பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் தான் கமல்ஹாசன் படத்தை தவறவிட்ட தகவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.