எப்போதும் வற்றாத பண வரவு வேண்டுமா? அப்போ இந்த 2 பொருள் போதும்!..!

Published by
K Palaniammal

Money attraction-பணம் பாதாளம் வரை செல்லும் எனக் கூறுவார்கள் ,அந்த அளவிற்கு பணம் என்பது மிக இன்றி அமையாததாகிவிட்டது .அப்படி பண குறைவு நம் வீட்டில் வராமல் இருக்க இந்த பரிகாரம் செய்தாலே போதும். அது என்னவென்று இப்பதிவில் பார்ப்போம்.

கல் உப்பு பரிகாரம்:

  • கல் உப்பு மகாலட்சுமிக்கு உகந்த பொருளாக கூறப்படுகிறது. வீட்டில் கல் உப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். வெள்ளிக்கிழமை மாலை 6 – 7 இந்த நேரத்தில் உப்பு வாங்கி வீட்டில்  வைத்தால் மகாலட்சுமி கடாட்சம் பெருகும்.
  • மாத சம்பளத்தில் அதாவது நம் வாங்கும் சம்பளத்தில் முதல் செலவாக உப்பு வாங்கினால் தேவையற்ற செலவுகள் அந்த மாதத்தில் ஏற்படாது. சமையலறையில் அடுப்புக்கு பக்கத்தில் உங்களுக்கு வலப்புறமாக தான் உப்பு ஜாடியை வைத்துக் கொள்ள வேண்டும்.
  • உப்பு ஜாடி வைக்கும் போது ஒரு பீங்கான் தட்டில், எவர்சில்வர் தட்டை தவிர்த்து வேறு ஏதேனும் எந்த தட்டில் வேண்டுமானாலும் இதை செய்யலாம்,ஒரு ரூபாய் நாணயங்கள் ஐந்து வைத்து அதன் மீது உப்பு ஜாடியை வைக்க வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் செல்வ வளம் பெறுகும் . மேலும் உப்பை பிளாஸ்டிக் பொருள்களில் வைக்கக் கூடாது.

மஞ்சள் பரிகாரம்:

  • மஞ்சளில் நிறைய வகை உண்டு அதில் விரலி மஞ்சள் என்று சொல்லக்கூடிய குச்சி மஞ்சளை தினமும் காலையில் மகாலட்சுமி படத்திற்கு முன்பு ஒன்று வைக்க வேண்டும் இப்படி 48 நாட்கள் மஞ்சளை வைக்க வேண்டும்.
  • மஞ்சளை வைக்கும் போது உங்களுக்கு என்ன தேவையோ அதை மனதில் நினைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் சொல்லி வைக்க வேண்டும். இதில் ஓரிரு  நாட்கள் தவறினால் தவறில்லை.
  • 48 நாட்கள் முடிந்ததும் இந்த மஞ்சளை மாலையாக கட்டி அருகில் இருக்கும் மகாலட்சுமி சன்னதியில் சமர்ப்பிக்க வேண்டும். இதை 48 நாள் முடிந்து பத்து நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும்.
  • மகாலட்சுமி தேவிக்கு மட்டுமே இதை சமர்ப்பிக்க வேண்டும். மகாலட்சுமி சன்னதி இல்லாவிட்டால் அவரின் அவதாரமான பத்மாவதி, ருக்மணி அம்மையார், சீதாதேவி சன்னதியிலும்  சமர்ப்பிக்கலாம்.

ஆகவே உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க இந்த இரண்டு பரிகாரத்தை செய்து செழிப்போடு வாழுங்கள்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago