உங்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் விஷ்ணுபதி புண்ணிய காலம்.. எப்போது தெரியுமா?

Published by
K Palaniammal

விஷ்ணுபதி புண்ணிய காலம்– விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் சிறப்புகளும் இந்த ஆண்டு வரும் தேதி பற்றி இப்பதிவில் காணலாம்.

விஷ்ணுபதி புண்ணிய காலம் என்றால் என்ன?

ஏகாதசி விஷ்ணுவிற்கு எவ்வளவு சிறப்பு பெற்றதோ அதேபோல் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலமும் சிறப்பு பெற்ற புனிதமான நாளாகும். இந்த புண்ணிய காலம் ஒருசில  தமிழ் மாதப் பிறப்பின் முதல் நாளே வரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் புண்ணிய காலமாகும் .

இப்படி வருடத்திற்கு நான்கு முறை வருகிறது. மாசி முதல் தேதி, வைகாசி முதல் தேதி ,ஆவணி முதல் தேதி ,கார்த்திகை முதல் தேதி இந்த நாட்களில் தான் விஷ்ணுபதி புண்ணிய காலம் வரும்.

இந்த நேரத்தில் செய்யும் அபிஷேகம், ஆராதனை, பூஜைகளுக்கு பல மடங்கு சக்தி உண்டு. இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தை மேற்கொள்வது பல ஏகாதசி விரதங்களை செய்ததற்கான சமம் என சாஸ்திரங்கள் கூறுகிறது.

இந்த புண்ணிய காலத்தை பற்றி பலருக்கும் தெரியாத ஒரு ரகசியமாகவே இருந்து வருகிறது. இதைத் தெரிந்தவர்கள் இன்றும் இந்த நேரத்தை பயன்படுத்தி பயன் பெற்று வருகிறார்கள்.

இந்த ஆண்டிற்கான இரண்டாவது புண்ணிய காலம் எப்போது?

வருகின்ற மே மாதம் 14ஆம் தேதி 2024 செவ்வாய்க்கிழமை வைகாசி ஒன்று அன்றைக்கு வருகிறது. அதிகாலை  1:30 மணிக்கு துவங்கி காலை 10:30 க்கு முடிவடைகிறது இந்தக் குறிப்பிட்ட நேரத்தை தவற விடாதீர்கள்.

வழிபாட்டு முறைகள்:

இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள கொடி மரத்தை 27 முறை வலம் வர வேண்டும் .ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் 27 பூக்களை வைக்க வேண்டும். கொடி மரத்தை சுற்றி வரும்போது கருவறை பிரகாரத்துடன் சேர்த்துதான் சுற்ற வேண்டும்.

காலை 10:30-க்குள் கோவிலுக்கு சென்று வரவேண்டும். மேலும் வீட்டிற்கு வரும்போது மஞ்சள் மற்றும் கல் உப்பை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து பூஜை செய்து பிறகு அதை பயன்படுத்த வேண்டும்.

பலன்கள்:

வருடத்தில் வரும் நான்கு விஷ்ணுபதி புண்ணிய காலத்தையும் தொடர்ந்து செய்து வரும்போது பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படும். தரித்திரம் நீங்கும், வறுமை ஒழியும். செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும்.

ஆகவே இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிக அதிகமாகவும் பூரணமாகவும் இருக்க கூடிய அற்புத நாளை தவற விடாதீர்கள்.

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

2 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

2 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

3 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

12 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

14 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

15 hours ago