த்மிழ் கடவுளான முருகப்பெருமானின் முதற்படை வீடாக கருதப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 8 தேதியே கொடியேற்றத்துடன் தெப்பத் திருவிழா தொடங்கியது.
தொட்ர்ந்து நடைபெற்று வரும் திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை சுவாமி தங்க சப்பரத்திலும் இரவில் பல வேறு வாகனங்களில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்தருளி நகரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் திருவிழாவின் 9ம் நாளான நேற்று காலை தெப்ப முட்டு தள்ளுதல் விழாவுடன் தை கார்த்திகை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முதலிய இசைக்கருவிகள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக தெப்பக்குளத்திற்கு வந்தார்.அவர் வந்தவுடன் தெப்ப முட்டு தள்ளுதல் நடைபெற்றது.
“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா …. வீரவேல் முருகனுக்கு அரோகரா“ என்ற பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு நடுவே சுவாமி உலா வந்த தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரானது கீழ ரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரத வீதி,தென்றலாய் மெல்ல, மெல்ல ஆடி ,வடக்கு ரத வீதி வழியாக தேர் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…