புது வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் செய்யும் போது முதலில் இதைத்தான் பண்ணணுமாம்..!

Published by
K Palaniammal

கிரஹப்பிரவேசம் -புதிதாக நாம் கட்டிய வீட்டுக்குச் செல்லும் போது சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிப்பது அவசியம் .அந்த வகையில் புது வீடு குடி போக உகந்த மாதங்கள், தவிர்க்க வேண்டிய மாதங்கள் ,முதலில் நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்கள் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஒரு வீட்டின் நிம்மதி என்பது அந்த வீட்டின் அமைப்பு மற்றும் அங்குள்ள மனிதர்களைப் பொறுத்து தான் அமையும். முன்பெல்லாம் வீடு கட்டும் போதே வீட்டிற்கு வயது, ஜாதகம் பார்த்து செய்யப்பட்டது என கூறப்படுகிறது. மாதங்களில் ஆக்கல்  மாதம் அழித்தல்  மாதம் என ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

புது வீட்டுக்கு செல்ல சிறந்த மாதங்கள்:

சித்திரை, வைகாசி, ஆவணி ,ஐப்பசி, கார்த்திகை, தை இந்த மாதங்கள் ஆக்கல்   மாதமாக கூறப்படுகிறது.

கிழமைகள்:

திங்கள், புதன், வியாழன் ,வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் புது வீடு கிரஹப்பிரவேசம் செய்யலாம்.

தவிர்க்க வேண்டிய மாதங்கள்:

ஆனி , ஆடி ,புரட்டாசி, மார்கழி ,மாசி ,பங்குனி இந்த மாதங்களில் புது வீடு குடி போகுதல் மற்றும் கிரஹப்பிரவேசம் செய்யக்கூடாது என கூறப்படுகிறது .

புது வீட்டுக்குள் முதலில் எடுத்துச் செல்ல வேண்டியவைகள்:

வீட்டில் வாழப்போகும் குடும்பத் தலைவி மற்றும் தலைவனின் ஜாதகத்தை பார்த்து  கிரகப்பிரவேசம் செய்வது மிகச் சிறப்பு ,அதுவும் பிரம்ம முகூர்த்தம் என சொல்லப்படும் அதிகாலை  4-6 இந்த நேரத்தில் செய்வது மிக மிக சிறப்பாகும்.

முதலில் பசுமாட்டை அழைத்துச் செல்லவும் .இது மகாலட்சுமியின் ஸ்ரூபம் எனவும் பூலோகத்தின் காமதேனு என கூறப்படுகிறது. மங்களப் பொருட்களான   மஞ்சள் பச்சரிசி, வெல்லம், உப்பு, பருப்பு, குத்துவிளக்கு, நிறைகுடம் தண்ணீர் இந்த பொருட்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். இதில் முதலில் அந்த வீட்டின் குடும்பத் தலைவி எடுத்துச் செல்ல வேண்டியது நிறைகுடம் தண்ணீர் தான்.

இந்த முறைகள் சொந்த வீட்டுக்கு மட்டுமல்லாமல் வாடகை வீட்டிற்கு குடி போகும் போதும் பின்பற்றலாம். ஆனால் மிக ஆடம்பரம் தேவையில்லை. மங்களப் பொருட்கள் எடுத்துச் செல்வது மற்றும் பால் காய்ச்சுதல் போதுமானதாகும்.

எனவே மகாலட்சுமி உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க புது வீட்டுக்கு குடி செல்லும்போது இந்த முறைகளை கையாளுங்கள்.

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

49 mins ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

12 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

16 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

17 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

17 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

17 hours ago