ஆன்மீகம்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் சிவன் கோவிலின் அதிசயம்..

Published by
K Palaniammal

பொதுவாக கோவில் என்றாலே காலையில் நடை திறக்கப்பட்டு இரவு நடை சாத்தப்படும். ஆனால் இக்கோவில் சற்று வித்தியாசமாக இரவில்தான் நடை திறக்கப்படுகிறது அதுவும் திங்கள் கிழமை மட்டும். இதைப் பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக காணலாம்.

இத்திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள. பறக்காலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் வெள்ளாள மரத்தில் அருள் பாலித்து வருகிறார்.

கோவிலின் வரலாறு

இரண்டு முனிவர்களுக்கு இடையே இல்லறம் சிறந்ததா துறவறம் சிறந்ததா என வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிவபெருமான் இரண்டுமே சிறந்தது தான் என தீர்ப்பு வழங்கினார் இருவருக்கும் பொதுவான கருத்தை கூறியதால் இவர் பொது ஆவுடையார் என அழைக்கப்படுகிறார்.

இந்த திருக்கார்த்திகைக்கு இந்த மாதிரி விளக்கு ஏற்றுங்கள்… !சூப்பரா இருக்கும்…

முனிவர்கள் ஈசனிடம் இங்குள்ள பக்தர்களுக்கு தாங்கள் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சிவபெருமானும் அங்குள்ள வெள்ளாள மரத்திலே ஐக்கியமானார்.

கோவிலில் சிறப்பு

இங்குள்ள வெள்ளாள மரத்தின் இலை பிரசாதமாக பத்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த இலைகளை பறித்துச் சென்று பூஜை அறை மற்றும் பண பெட்டிகளில் வைத்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம். அங்குள்ள ஆலமரத்திற்கு தொட்டில் கட்டி வழிபட்டால் திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

முனிவர்களுக்கு சிவபெருமான் கார்த்திகை மாதம் திங்கள் கிழமை அன்று காட்சியளித்ததால் ஒவ்வொரு திங்கள் கிழமை அன்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதுவும் சிதம்பரத்தில் அர்த்த சாம பூஜை நடந்து முடிந்ததும் இரவு 10 மணிக்கு மேல் இங்கு நடை திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு பூஜை நடைபெறுகிறது.

இக்கோவில் திறக்கப்பட்ட பின் மரத்தின் பகுதியை வெண்ணிற துணியால் மறைத்து முன்பக்கம் சிவலிங்கமாக அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகிறது. ஆலமரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் தரிசனம் செய்த முடித்த பின்பு சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்தப்படுகிறது. தைப்பொங்கல் அன்று மட்டும் அதிகாலை முதல் மாலை 7 மணி வரை நடை திறக்கப்பட்டு இருக்கும். அன்று இறைவனின் மேனியில்  சூரிய ஒளி படுவது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

இது தவிர சிவராத்திரி, திருக்கார்த்திகை, அண்ணா அபிஷேகம் போன்ற எந்த பண்டிகையும் கொண்டாடப்படுவதில்லை. இங்கு நடை அடைத்திருக்கும் போது அங்குள்ள கதவுக்கு பூஜை நடத்தப்படுகிறது பக்தர்கள் கதவையே சிவனாக பாவித்து மாலை சாத்தி தரிசித்து செல்கிறார்கள். எனவே ஒருமுறை திங்கள் அன்று பொது ஆவுடையார் கோவிலுக்கு வந்து தரிசித்து ஈசனின் அருளை பெற்று செல்லுங்கள்.

Published by
K Palaniammal

Recent Posts

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லி :  மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…

8 hours ago

INDvENG : அணியை அறிவித்த இங்கிலாந்து! 15 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் ஜோ ரூட்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…

9 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!

டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…

10 hours ago

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!

கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…

11 hours ago

பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…

11 hours ago

“இவங்க செஞ்ச சம்பவம் தனி வரலாறு”..ஐசிசி பட்டியலில் முன்னேறிய அபிஷேக், வருண்!

டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…

11 hours ago