வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரம், தை மாதம் பூசம் நட்சத்திரம், மாசி மாதம் மகம் நட்சத்திரம் , பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் ஆகிய விழாக்கள் முத்தமிழ் கடவுளான நம் முருகனுக்குரியவை. இவைகள் எம்பெருமான் ஈசனுக்குரியவை. அதிலும் குறிப்பாகத் தைப்பூசம் சிவ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும்.
ஆனாலும் தமிழர்கள் தமிழ்கடவுள் முருகன்பால் கொண்ட அன்பின் காரணமாக இதை முருக வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொண்டதாக மாற்றினார்கள் பண்டைய தமிழர்கள். தந்தைக்கு பிரணவத்தை கற்றுக்கொடுத்த தகப்பன் சுவாமியான சுப்பிரமண்யனை தைப்பூசத்தன்று வழிபட்டால் சகல ஞானமும் கைகூடும் என்பது நம்பிக்கை. கொடிய பாம்பு தீண்டி இறந்துபோன பூம்பாவாயை உயிருடன் எழுப்ப முருகனை நினைத்து ஒரு பதிகம் பாடி உயிருடன் மீட்டனர்.
ஞானசம்பந்தர் பூம்பாவையை உயிரோடு எழுப்பிய அற்புதமும் தைப்பூச நன்னாளில்தான் நடந்தது. பாடிய பதிகத்தில் தைப்பூசத்தைக் கொண்டாடும் சிறப்புகள் அந்தக் காலத்தில் இருந்ததை வெளிப்படுத்துகிறது. இதற்காக, தைப்பூசத்தையொட்டி முருகன் குடிகொண்டிருக்கும் கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வது வழக்கம். இவ்வாறு கால் நடையாக காவடிகளும் வேல்குத்துதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் மனப்பூர்வமாக செலுத்துவர். இதுபோன்ற வேண்டுதல்கள் செய்யாதவர்களும் இந்த நாளில் முருகன் ஆலயம் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்யதால் கல்வி, செல்வம், ஞானம் முதலிய சகல வரங்களையும் பெற்று வாழ்வில் வசந்தம் அடைவார்கள்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…