Diwali 2023 History [File Image]
வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளிக்கு உருவான வரலாறு குறித்து பல்வேறு புராண கதைகள் கூறப்பட்டாலும், அவை அனைத்தும் வட மாநிலங்களை சார்ந்து குறிப்பிடப்பட்டவகையாக உள்ளது. இந்த பண்டிகை எவ்வாறு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது என்பது பற்றிய தெளிவான விளக்கம் தற்போது வரை இல்லை.
தமிழகத்தின் உள்ள பல்வேறு கட்சியினர் குறிப்பாக ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் கூட தீபாவளி பண்டிகையை தினத்தை கொண்டாடுவதில்லை. இது தமிழரின் பண்டிகை இல்லை என பலர் கூறி தீபாவளி பண்டிகையை புறக்கணிப்பதுண்டு.
தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒருசேர கொண்டாடும் பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகை தான். அறுவடை திருநாளாக பொங்கல் தினமானது எந்தவித பட்டாசு மாசு இல்லாமல், தமிழர்கள் நேரடியாக பலனடையும் வண்ணம் அரிசி, காய்கறிகள், மண்பானைகள் என அனைத்தும் தமிழர்களின் மரபு சார்ந்து தமிழர்களின் வர்த்தகம் சார்ந்து, மதங்கள் கடந்து கொண்டாடப்படும் விழாவாக தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி அப்படி இல்லை. இந்து மதத்தினர் மட்டும் கொண்டாடும் திருவிழாவாக உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
தீபாவளி பற்றி மறைமலை அடிகள் கூறும்போது, ஆரிய பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனை கதையே தீபாவளி என்று குறிப்பிட்டார். ஆரியர்கள் கூறும் அசுரன் இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களை ஆரியர்கள் அரக்கர்கள் என்று இழிந்து பேசுகின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
விவேகானந்தர் கூறுகையில், தென்னிந்தியாவில் இருந்த மக்களை ராமாயணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் குறிப்பிடபட்டு இருந்தனர். அந்த ராமன் ராவணனை கொன்று வனவாசம் சென்று திரும்பிய நாள் தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.
முனைவர் பரமசிவம் எழுதிய ‘அறியப்படாத தமிழகம்’ எனும் நூலில், தமிழர் மரபு வழி பொருளாதாரத்தோடும் பருவ நிலைகளுடன் தொடர்பில்லாத ஒரு திருவிழா தீபாவளி. தீபாவளி அன்று வெடிக்கப்படும் பட்டாசு கலாச்சராமானது 15ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் அறிமுகமாகவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியார் கூறுகையில், தமிழகத்தில் தீபாவளி கொண்டாட்டம் தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது. திராவிடர்கள் ஆரியர் இனத்திற்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, விடுதலை பெற விருப்பமில்லாத கூட்டம் என்பதை காட்டிக்கொள்ள கொண்டாடப்படும் விழா தான் தீபாவளி என காட்டமாக தனது கருத்தை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…