குளிகை நேரத்தில் இதெல்லாம் செய்யக்கூடாதா? இது தெரியாம போச்சே!

Published by
K Palaniammal

பொதுவாக நாம் ஒரு காரியம் செய்கிறோம் என்றால் ராகு காலம், எமகண்டம் இருக்கக் கூடாது அதுபோல்தான் குளிகை நேரத்திலும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று நம் பெரியோர்கள் கூறியுள்ளனர் அதைப்பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ராகு காலம் எமகண்டம் என்பது துர்க்கை வழிபாட்டிற்கு சிறந்த நேரமாகும். அதுபோல் குளிகை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட என்பது பொருளாகும். அதாவது குளிகை நேரத்தில் நாம் எதை செய்தாலும் திரும்பத் திரும்ப செய்ய வைக்கும் என்பது அந்த நேரத்திற்கான தன்மையாகும். அதனால் இந்த குளிகை நேரத்தில்  ஒரு சில காரியங்களை பார்த்து செய்ய வேண்டும் என பெரியோர்கள் கூறுகின்றனர்.

குளிகை நேரத்தில் செய்ய வேண்டியவை

சுப காரியங்களில்  திருமணத்தை தவிர மற்றவை செய்யலாம் . ஏனெனில் திருமணம் என்பது ஒரு முறை செய்வதுதான் நம் கலாச்சாரம்.

கடன் அடைப்பது ,பிறந்தநாள் கொண்டாட்டம், திருமண நாள் கொண்டாட்டம் மற்றும் நம் வாழ்வில் எதெல்லாம் திரும்ப வேண்டும் என்று நினைக்கிறோமோ அவற்றை செய்யலாம்.

செய்யக்கூடாதவைகள்

தகனம் செய்யக்கூடாது ஒருவர் மரணம் அடைந்து விட்டால் குளிகை நேரத்தில் அவரை எடுப்பது முதல் எரியூட்டும்  வரை எந்த நிகழ்வையும் செய்யக்கூடாது அவ்வாறு செய்தோமே ஆனால் வீட்டில் மீண்டும் மீண்டும் அந்நிகழ்வு நடக்கும், என்பதால் தவிர்க்க வேண்டும்.

கடன் வாங்குதல், நகை அடமானம் வைத்தல் ,வீடு மாறுதல் போன்றவற்றையும் செய்யக்கூடாது.

ஆகவே குளிகை நேரம் என்றாலே கெட்ட நேரம் என்பதில்லை அந்த நேரத்தில் நாம் செய்வதை திரும்பச் செய்ய வைக்கும், அதனால் நாம் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என அறிந்து அந்நேரத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

14 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

18 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

19 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

19 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

19 hours ago