வாரத்தில் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் சிவன் கோவிலின் அதிசயம்..

Published by
K Palaniammal

பொதுவாக கோவில் என்றாலே காலையில் நடை திறக்கப்பட்டு இரவு நடை சாத்தப்படும். ஆனால் இக்கோவில் சற்று வித்தியாசமாக இரவில்தான் நடை திறக்கப்படுகிறது அதுவும் திங்கள் கிழமை மட்டும். இதைப் பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக காணலாம்.

இத்திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள. பறக்காலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் வெள்ளாள மரத்தில் அருள் பாலித்து வருகிறார்.

கோவிலின் வரலாறு

இரண்டு முனிவர்களுக்கு இடையே இல்லறம் சிறந்ததா துறவறம் சிறந்ததா என வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிவபெருமான் இரண்டுமே சிறந்தது தான் என தீர்ப்பு வழங்கினார் இருவருக்கும் பொதுவான கருத்தை கூறியதால் இவர் பொது ஆவுடையார் என அழைக்கப்படுகிறார்

முனிவர்கள் ஈசனிடம் இங்குள்ள பக்தர்களுக்கு தாங்கள் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சிவபெருமானும் அங்குள்ள வெள்ளாள மரத்திலே ஐக்கியமானார்.

கோவிலில் சிறப்பு

இங்குள்ள வெள்ளாள மரத்தின் இலை பிரசாதமாக பத்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த இலைகளை பறித்துச் சென்று பூஜை அறை மற்றும் பண பெட்டிகளில் வைத்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம். அங்குள்ள ஆலமரத்திற்கு தொட்டில் கட்டி வழிபட்டால் திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

முனிவர்களுக்கு சிவபெருமான் கார்த்திகை மாதம் திங்கள் கிழமை அன்று காட்சியளித்ததால் ஒவ்வொரு திங்கள் கிழமை அன்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது .அதுவும் சிதம்பரத்தில் அர்த்த சாம பூஜை நடந்து முடிந்ததும் இரவு 10 மணிக்கு மேல் இங்கு நடை திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு பூஜை நடைபெறுகிறது.
இக்கோவில் திறக்கப்பட்ட பின் மரத்தின் பகுதியை வெண்ணிற துணியால் மறைத்து முன்பக்கம் சிவலிங்கமாக அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகிறது. ஆலமரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் தரிசனம் செய்த முடித்த பின்பு சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்தப்படுகிறது. தைப்பொங்கல் அன்று மட்டும் அதிகாலை முதல் மாலை 7 மணி வரை நடை திறக்கப்பட்டு இருக்கும். அன்று இறைவனின் மேனியில்  சூரிய ஒளி படுவது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

இது தவிர சிவராத்திரி, திருக்கார்த்திகை, அண்ணா அபிஷேகம் போன்ற எந்த பண்டிகையும் கொண்டாடப்படுவதில்லை. இங்கு நடை அடைத்திருக்கும் போது அங்குள்ள கதவுக்கு பூஜை நடத்தப்படுகிறது பக்தர்கள் கதவையே சிவனாக பாவித்து மாலை சாத்தி தரிசித்து செல்கிறார்கள். எனவே ஒருமுறை திங்கள் அன்று பொது ஆவுடையார் கோவிலுக்கு வந்து தரிசித்து ஈசனின் அருளை பெற்று செல்லுங்கள்.

Recent Posts

இந்த அஜித்தை தான் நாங்க எதிர்பார்த்தோம்! குட் பேட் அக்லியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…

50 minutes ago

அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

2 hours ago

அன்புமணி நீக்கம்., “ஜனநாயக படுகொலை?” பாமகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…

3 hours ago

RCB முதலிடம் பிடிக்குமா? தோல்வியே காணாத டெல்லி உடன் இன்று மோதல்!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…

3 hours ago

ஆளுநர் விவகாரம்: “வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும் Red Letter Day” – முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை :  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…

3 hours ago

டொமினிகன் இரவு விடுதியின் மேற்கூரை விபத்து.., அதிகரிக்கும் எண்ணிக்கை.!

டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…

4 hours ago