இன்று தை மாதம் 24ஆம் தேதி (பிப்ரவரி 7, 2024) ஒவ்வொரு ராசிக்குமான நற்பலன்களை இங்கே காணலாம்… மேஷம் : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய தருணங்கள் அதிகமாக இருக்கும், அதனை மனதில் வைத்துக் கொண்டு தெளிவாக சிந்தித்து உங்களுக்கு தேவையான சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும். உங்களுக்கு இன்று கடினமான சூழ்நிலைகள், சவால்களை சந்திக்க நேரலாம். அதனை திறம்பட கையாள வேண்டும். உங்கள் துணையுடன் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகள் உங்களுக்கு […]
ஒவ்வொரு வீட்டு பூஜை அறையிலும் படங்கள் வைத்து வழிபடுவது ஒரு முறை, அதைத் தாண்டி விக்ரகங்கள் மற்றும் சிலைகள் வைத்து வழிபடுவதும் ஒரு முறை தான். படங்களை வைத்துக் கொள்வதற்கு அளவு இல்லை ஆனால் விக்ரகங்களை நம் வீட்டில் வைத்து வழிபடுவதற்கு அளவும் சில முறைகளும் உள்ளது அதைப்பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். விக்கிரங்ககளின் வகைகள் பொதுவாக விக்கிரகங்கள் இறைத்தன்மையை ஈர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இது அதன் அளவைப் பொறுத்து மாறுபடும். விக்கிரகங்கள், கருங்கல், பஞ்சலோகம் […]
ராசிகளின் முதல் ராசியாக திகழும் மேஷ ராசி அன்பர்களே நீங்கள் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது பற்றியும் மேஷ ராசியில் உள்ள நட்சத்திரக்காரர்கள் எங்கு சென்றால் சிறப்பு என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம். மேஷ ராசியின் தனித்துவம் பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் நினைத்ததை உடனே செய்ய வேண்டும் என்ற துடிப்போடு செயல்படுபவர்கள். கிரகிக்கும் தன்மையும், கற்றுக் கொள்ளும் வேகமும் ,இவர்களிடத்தில் அதிகமாக இருக்கும். ஆனால் இவர்களுக்குப் பிடித்த விஷயத்தை செய்தால் அவர்களை சற்று நம்பி ஏமாற […]
சமையலறை என்பது ஒரு வீட்டின் ஆணிவேர் என்று கூறலாம். நம் வீட்டு சமையல் அறையில் ஒரு சில பொருட்களை வைத்தால் நிச்சயம் அன்னம் குறையாது, ஐஸ்வரியத்திற்கும் குறைவிருக்காது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம் ஆரோக்கியம் சமையலறையில் தான் துவங்குகிறது, ஒரு குடும்பத்திற்கு முக்கிய இடம் எனலாம் அங்கு சமைக்கப்படும் உணவுகள் தான் அங்கு வசிக்கும் குடும்பத்தாருக்கு உணர்வாக மாறுகிறது அதன் மூலம்தான் நம் மற்ற வேலைகளை செய்ய முடிகிறது குறிப்பாக நடமாட முடிகிறது அப்படிப்பட்ட […]
நம்மில் பலருக்கும் தோன்றும் சந்தேகங்களில் ஒன்று அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜை செய்யலாமா …விளக்கு ஏற்றலாமா மற்றும் கவசங்கள் பதிகங்கள் போன்றவற்றை படிக்கலாமா என சந்தேகம் ஏற்படும் அதை தெளிவுபடுத்தும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கும். பொதுவாக அசைவம் சாப்பிடுவது அவரவர் மன ஓட்டத்தை பொருத்து தான். ஆனால் இந்த உலக மக்கள் அனைவரும் உயர்வு பெற வேண்டும் என்று பல ஞானிகள் நல்ல விஷயங்களை சொல்லி சென்றுள்ளனர், இப்படி ஞானப் பெரியவர்கள் நமக்கு சைவப் பாதையை காட்டியதற்கு […]
கோவிலுக்கு நாம் சென்று வழிபடும்போது சுவாமி திரை போட்டு மறைத்திருந்தால் அவ்வபோது நாம் வழிபடலாமா சந்தேகம் பலருக்கும் ஏற்படும் அதைப்பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். வழிபாடும் முறை பொதுவாக நம் ஆலயத்திற்கு செல்லும் போது அபிஷேகம் நேரம் அறிந்து செல்வதில்லை .ஒவ்வொரு ஆலயத்திலும் அபிஷேக நேரம் மாறுபடும் அது மட்டுமல்லாமல் பெரிய பெரிய கோவில்களில் அபிஷேக நேரம் விசேஷ நாட்களில் மாறுபடும் என அங்கேயே எழுதி இருப்பார்கள். இது அனைவருக்குமே தெரிந்திருக்கும் என கூற முடியாது. ஆனால் […]
பொதுவாக நாம் ஒரு காரியம் செய்கிறோம் என்றால் ராகு காலம், எமகண்டம் இருக்கக் கூடாது அதுபோல்தான் குளிகை நேரத்திலும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று நம் பெரியோர்கள் கூறியுள்ளனர் அதைப்பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ராகு காலம் எமகண்டம் என்பது துர்க்கை வழிபாட்டிற்கு சிறந்த நேரமாகும். அதுபோல் குளிகை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட என்பது பொருளாகும். அதாவது குளிகை நேரத்தில் நாம் எதை செய்தாலும் திரும்பத் திரும்ப செய்ய வைக்கும் என்பது அந்த நேரத்திற்கான தன்மையாகும். […]
இறைவனை நாம் வழிபடும் போது உடுத்தும் உடைகளுக்கு பல கட்டுப்பாடுகள் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். கோவிலுக்குச் செல்லும்போதும் நம் வீட்டில் பூஜை செய்யும்போதும் கருப்பு உடை ஏன் அணிய கூடாது என்று பலருக்கும் இருக்கும் சந்தேகத்தை போக்கும் வகையில் இப்பதிவு அமைந்திருக்கும். வெள்ளை நிறம் துறவிகளுக்கான நிறமாகவும், காவி நிறம் சன்னியாசிகளுக்கு உரிய நிறமாகவும் மஞ்சள் மற்றும் சிகப்பு நிறம் மங்களகரமான நிறமாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு தன்மைகள் உள்ளது. இதில் கருப்பு நிறம் […]
திதி என்பது நம் இறந்தவர்களுக்கு செய்யும் முறையாகும் சிலர் இதை முறையாக செய்வதில்லை .அதனால் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். திதியை எவ்வாறு செய்வது மற்றும் திதி கணக்கிடும் முறை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். திதி கொடுக்கவில்லை என்றால் என்ன பிரச்சனை வரும் தெரியுமா? திதி கொடுக்கவில்லை என்றால் இறந்தவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ,ஆனால் உயிரோடு வாழும் தலைமுறையினருக்கு நிறைய பிரச்சனைகள் வரும் குறிப்பாக குழந்தை பேரு கிட்டாமல் போகும் அப்படியே பிறந்தாலும் ஊனமுற்ற […]
அரச மர வழிபாடு என்பது மிக உயர்ந்த வழிபாடாகும். இந்த அரச மரத்தை ஏன் சுற்றிவர வேண்டும் அதனால் என்ன நன்மைகள் மற்றும் எந்தக் கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம்.. அரச மரத்தை அதிகாலையில் வலம் வருவதே சிறந்தது.அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மதேவரும் நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும் நுனிப்பகுதியில் சிவபெருமானும் வாசம் செய்கிறார்கள் அதனால்தான் அரசமரம் மும்மூர்த்திகளின் வடிவம் என கூறப்படுகிறது. அரச மரத்தை வளம் வருவதால் ஏற்படும் நன்மைகள் குழந்தை இல்லாதவர்கள் […]
பொதுவாக நோய் வாய் பட்டால் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும் ஆனால் மருத்துவமனைக்கு எல்லாம் மருத்துவமனை இறைவனின் சன்னிதானம்தான் தான். மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத வியாதிகளுக்கு கூட இறைவனின் மகத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை . அந்த வகையில் இன்று நாம் திருக்கொடுங்குன்றநாதர் ஆலயத்தின் சிறப்பையும் பல ஆச்சரியமூட்டும் தகவல்களையும் தெரிந்து கொள்வோம். திருத்தலம் அமைந்துள்ள இடம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிங்கம் புணரி அருகில் […]
அறிவியல் ரீதியாகவும் வழிபாட்டு ரீதியாகவும் ஒரு குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் மொட்டை அடித்து காது குத்த வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. இது பற்றி அடுத்த தலைமுறையினர் நம்மிடம் கேட்டால் நாம் பதில் சொல்ல தெரிய வேண்டும் அல்லவா… அது ஏன் என்று இந்த பதிவில் பார்ப்போம் . மொட்டை அடித்து காது குத்துதல் ஒவ்வொரு குடும்பத்திலும் மாறுபடும் .ஒரு சிலர் குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் செய்வார்கள் அல்லது ஒன்பது மாதத்தில் செய்வார்கள் இப்படி […]
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய இந்தக் காள ஹஸ்தி என்ற ஊரில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலின் சிறப்பு, மற்றும் பரிகாரங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ஸ்தல வரலாறு ஸ்ரீ என்பது சிலந்தியும் காள என்பது பாம்பும் ஹஸ்தி என்பது யானையும் குறிக்கும். சிவபெருமானை வணங்கி சாப விமோசனம் பெற்று முக்தி பெற்றதால் ஸ்ரீ காள ஹஸ்தி என அழைக்கப்படுகிறது. கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் காற்று ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. […]
இந்த வருடம் தைப்பூசம் ஜனவரி 25 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தைப்பூசம் என்றாலே முருகனுக்கு உரிய தினம் என்று அனைவருமே அறிந்ததுதான், ஆனால் அன்று யாரையெல்லாம் வழிபடலாம் ,தைப்பூசத்தின் சிறப்பு ,பூசம் துவங்கும் நேரம்,வழிபாடும் நேரம் பற்றி இப்பதிவில் பார்ப்போம். தைப்பூசத்தின் சிறப்பு பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஒன்று சேரும் நாளையே தைப்பூசம் என்கிறோம்.பழனியில் ஆண்டி கோலத்தில் இருந்த முருகப்பெருமானுக்கு பார்வதி தேவி ஞானவேலை கொடுத்த தினமாக தைப்பூசம் கருதப்படுகிறது. அந்த வேலை […]
அயோத்தியில் புதியதாக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகமாக தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு குழந்தை ராமர் சிலை தற்போது பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. சிலை நிறுவும் பூஜைகளை பிரதமர் மோடி மேற்கொண்டார். ராமர் கோயில் நிறுவப்பட்டுள்ள அயோத்தியில் தங்க மாளிகை ஒன்று உள்ளது. அது சீதா தேவிக்கென தனி கோயிலாக இந்த கனக் பவன் பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு ராமர் மற்றும் சீதாவிற்கு அளிக்கப்பட்ட திருமண பரிசு தற்போது […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்த்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்று, அன்று இரவு நடை சாத்தப்பட்டது. அதன் பின்னர், டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று மகர ஜோதி தரிசனம் என்பதால் சன்னிதானத்தில் கூட்டத்தை தவிர்க்க 40 ஆயிரம் […]
போகி என்றாலே நம் அனைவரது நினைவுக்கும் வருவது பழையன கழிவதும் புதியன புகுதலுக்கும் உண்டான நாள். தை திருநாள் கொண்டாடுவதற்கு முதல் நாள் போகி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பழைய பொருள்களை எரிக்க வேண்டுமே என்று தேவையற்ற பொருட்களை எரித்து காற்று மாசடைவதை ஏற்படுத்துகிறோம் எனவே எவற்றையெல்லாம் எரிக்கலாம் அன்று யாரை வழிபாடு செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்… நம் முன்னோர்கள் அன்று வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு, ஆனால் இன்று நாம் வாழும் வாழ்க்கை […]
பொதுவாக கோவில் என்றாலே காலையில் நடை திறக்கப்பட்டு இரவு நடை சாத்தப்படும். ஆனால் இக்கோவில் சற்று வித்தியாசமாக இரவில்தான் நடை திறக்கப்படுகிறது அதுவும் திங்கள் கிழமை மட்டும். இதைப் பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக காணலாம். இத்திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள. பறக்காலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் வெள்ளாள மரத்தில் அருள் பாலித்து வருகிறார். கோவிலின் வரலாறு இரண்டு முனிவர்களுக்கு இடையே […]
நம் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபடும் வழிபாட்டில் பல்வேறு முறைகள் உள்ளது ,அதில் அர்ச்சனை செய்வதும் ஒரு முறையாகும், அதை நம் பெயரில் செய்யலாமா அல்லது இறைவன் பெயரில் செய்வதா என சிலருக்கு சந்தேகம் ஏற்படும் அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் அர்ச்சனை என்பது அருள் சித்தல் என்பதாகும், அதாவது அர்ச்சனை பாட்டு ஆகும் நாமங்களால் இறைவனை பாடி வழிபட கூடியது. அங்கு உள்ள இறைவனிடம் நம் மனதில் உள்ள பிரார்த்தனைகளை விண்ணப்பம் செய்து அவரிடத்தில் […]
ஒரு கோவில் என்று எடுத்துக் கொண்டால் எல்லா இடத்திலேயும் வேண்டுதல் பண்ணலாம் என்று நினைப்பது தவறு. விழுந்து வணங்குவதற்கு என்று ஒரு இடமும் இருக்கு, பிரார்த்தனைகளை சொல்வதற்கு என்று ஓர் இடம் இருக்கு, நன்றி தெரிவிப்பதற்கு என்று ஓரிடம் இருக்கு இவ்வாறு அது என்னவென்று தெரிந்து கொண்டு வழிபாட்டை மேற்கொள்ளும்போதுதான் 100% வழிபாடு பலனுள்ளதாக இருக்கும் அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதலில் ஒரு கோவிலுக்கு சென்றால் விநாயகர் சன்னதிக்கு சென்று நம் வேண்டுதலை கூறுவோம் […]