திருச்சியில் அமைந்துள்ள பிரதிபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியுள்ளது.அதன் படி முதல் நாளான இன்று நம்பெருமாள் காசுமாலை அலங்காரத்தில் புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் நீள்முடி கொண்டையுடனும் , வைர அபயகஸ்தரம், காசு மாலை மற்றும்முத்து மாலை அலங்காரத்துடன் கண்ணை கவரும் விதத்தில் புறப்பட்ட நம்பெருமாள் அர்ஜுன மண்டபம் […]
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல்பத்து உற்சவம் துவங்கியுள்ளது. வருகிற 18-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. 108 வைணவத் தலங்களில் முதன்மையானதாக திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து திருமொழி திருவிழா இன்று துவங்கியுள்ளது. இந்த விழாவையொட்டி, நம்பெருமாள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். விழாவின் முக்கிய நிகழ்வான […]
திருச்சியில் பிரசித்தி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறுகிறது. சொர்க்கவாசல் என்றே ஸ்ரீரங்கம் தான் வரும்.டிச.18ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மை பெற்ற திருத்தலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு இங்கு உற்சவங்கள் மற்றும் விழாக்கள் நடந்து வருகின்றன. மேலும் இங்கு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் 20 நாட்கள் நடக்கிறது வைகுண்ட ஏகாதசி […]
பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பான புகாரை விசாரிக்க இந்துசமய அறநிலையத்துறை மூவர் குழு ஒன்றை அமைத்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் தொடர்ப்பட்ட வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான இந்துசமய அறநிலையத்துறை வழக்கறிஞர் மயில் சிலை விவகாரத்தை விசாரிக்க ராமேஸ்வரம் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் ஆகிய கோயில்களின் இணை ஆணையர்கள் மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர் […]
உலக புகழ்பெற்ற சிதம்பர நடராஜ ஆருத்ரா தரிசனம் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வரும் 23-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெறுகிறது. உலக புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற சிதம்பர நடராஜர் கோவிலி ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும் மாதங்களிலே புனிதமான மாதமான மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் இந்த கோவிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இரண்டு திருவிழாக்களிலும் மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்குகிறார். இந்நிலையில் சிதம்பர நடராஜர் கோவிலில் இந்த […]
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராகுதலமான நாகநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்திரன், சூரியன் வழிபட்டார்கள் என்றும் அதன் மூலம் பேறு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு விழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை கடைஞாயிறு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் கொடி மரத்து சிறப்பு ஹோமம் மகா தீபாராதனை நடைபெற்றது.மேலும் தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா […]
சபரிமலையில் அடிப்படை வசதியில் பிரச்னை ஏற்பட்டதற்கு சமீபத்தில் ஏற்பட்ட கனமழை பெருவெள்ளமே காரணம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், கேரள மக்கள் மதசார்பின்மையை விரும்புவதால், சபரிமலை விவகார போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளது. சபரிமலையில் பாஜகவின் போராட்டம் முடிவுற்றதாக தெரிய வந்ததன் மூலம், நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கேரள அரசின் நிலைபாட்டை அங்கீகரிக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. சபரிமலையில் அடிப்படை வசதியில் பிரச்னை ஏற்பட்டதற்கு சமீபத்தில் ஏற்பட்ட […]
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் செல்வார்கள் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை காண ஆர்வம் கொள்வார்கள் இந்நிலையில் வேங்கடேசப் பெருமாளுக்கு அன்றாட நடைபெறும் நிகழ்ச்சிகளைத் பக்தர்களுக்கு வேங்கடேஸ்வரா என்கிற பக்தி சேனல் (எஸ்.வி.பி.சி)என்று ஒளிபரப்பி வருகிறது. இந்த சேனலில் சுப்ரபாதம், கல்யாணோத்ஸவம், சகஸ்ரதீப அலங்கார சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. திருப்பதி செல்ல வேண்டும் அங்கு திருப்பதியானை தரிசிக்க வேண்டும் அவருக்கு நடைபெறும் சேவைகளை தரிசிக்க வேண்டும் என்று எண்ணும் பக்தர்கள் ஏராளம் […]
கேரள சட்டப்பேரவையில் சபரிமலை பிரச்சனையை எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சபரிமலையில் வன்முறை சம்பவங்களும், போராட்டங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் இன்று கேரள சட்டப்பேரவை நடைபெற்றுவருகிறது. கேரள சட்டப்பேரவையில் சபரிமலை பிரச்சனையை எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். சபரிமலையில் பதற்றத்துக்கு கேரள அரசு காரணம் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று ஏற்றபடுகிறது. மகா தீபம் என்றழைக்கப்படும் ஜோதியாக எழுந்தருளும் சிவபெருமான் காட்சி தரும் இந்த அற்புதமான நிகழ்வானது வருடம் தோறும் கார்த்திகை மாதம் நடைபெறுகிறது. இந்த ஜோதி தரிசனத்தை நாம் காண நமக்கு வாய்ப்பளித்தவர்கள் திருமால், பிரம்மதேவர்.ஆம் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே யார் பெரியவன் என்ற போட்டி நிலவியதாவும் இந்த போட்டியில் தலையிட்ட சிவபெருமான் தன் அடிமுடியை யார் காண்கின்றாரோ அவரே பெரியவர் என்ற புராண வரலாறு கூறுகிறது. […]
திருவண்ணாமலையில் பரணி தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று கார்த்திக்கை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் சிவத்தலம் இதுவாகும்.இங்கு எம்பிரான் ஜோதி ரூபமாக எழுந்தருளும் அற்புதக்காட்சி கார்த்திகை மாதம் மகாதீபம் என்றழைக்கப்படுகிறது.இங்கு அண்ணாமலையாராக சிவபெருமானும், உண்ணாமுலையம்மையாக பார்வதிதேவியும் காட்சி தருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.அதிகாலை 4 மணிக்கு கோவிலின் கருவறை முன்பு பூஜைகளுடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் […]
சபரிமலையில் இன்று இரவுடன் முடிவடைய இருந்த 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது.ஐப்பசி வழிபாட்டுக்காக கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடை திறந்திருந்தபோது பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கிற […]
கார்த்திகை மாத பிறப்பையொட்டி பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் நடை தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்து உள்ள பிள்ளையார்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற கேட்பதை அருளும் ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் உள்ளது. கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மிக சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி […]
சாப்டூரில் பிரசித்திபெற்ற சதுரகிரி மகாலிங்க சுவாமி கோவில் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட் கோவிலாக உள்ளது. மலை மீது அமைந்துள்ளஉள்ள இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி ஆகிய நாள்களில் ஏராளமான பக்தர்கள் மலையேறி செல்வார்கள்.பக்தர்கள் மலையேறுவதற்கு தாணிப்பாறையில் வனத்துறை கேட்டுகள் 4 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டு மலைப்பகுதிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும். மேலும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை ஏற மற்றும் இறங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் வருகிற 22 […]
திருவண்ணாமலையில் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்தில் வீதி உலா நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் வெகுச்சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தனித்தனி வெள்ளி மற்றும் கண்ணாடி விமானத்தில் மாடவீதியில் பவனி வர பக்தர்கள் பக்தி கோஷத்துடன் சுவாமி தரிசனம் பெற்றனர்.இந்நிலையில் இரவு 10 மணியளவில் வாணவேடிக்கையுடன் சாமி வீதி உலா நடந்தது. கார்த்திகை திருவிழாவின் 2-ம் நாளான நேற்று திருவண்ணாமலையில் காலை 11 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், […]
சபரிமலை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சியினருடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் புகழ் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. இதற்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான […]
சபரிமலை கோயில் தொடர்பான சீராய்வு மனுக்களை நீதிமன்றத்தில் விசாரிக்க கோரியது நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம். சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்துவந்த நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிரான மனு மீது இன்று விசாரணைக்கு வருகிறது. சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 4 நாளான நேற்று கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழ் கடவுள் முருகபெருமானின் அறுபடைவீடுகளில் 2-ம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் அதிகாலையில் யாகசாலை பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது. 2-ம் திருநாளில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப […]
இன்று அரோஹரா பக்தி கோஷத்திடன் ஆறுபடை வீடுகளிலும் துவங்கியது கந்த சஷ்டி திருவிழா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளின்றி உலகிலில் பொருளேது முருகா…என்று தமிழ் கடவுளான ஆறுபடை வீட்டை தன்னகத்தே கொண்டு பக்தர்களிடம் திருவிளையாடல் புரிந்து அவர்களுக்கு தன் அருட்காடச்சை அள்ளி வழங்கும் அந்த அழகனை இந்த கந்த சஷ்டியில் தவம் இருப்பது போல விரதம் இருந்து மனதாரா மால்முருகனே மகிழ்ச்சி பொங்க வழிபடுவோம். கந்த சஷ்டியில் விரதம் இருப்பவர்கள் அழியாத புகலும்,பிள்ளை பெறும் கிடைக்கும் […]
ஆறுபடை வீடுகளிலும் இன்று தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா இன்று கோடியோற்றத்துடன் தொடங்கி 6 நாட்கள் நடைபெற்றும் இந்த விழாவனது சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணத்துடன் நிறைவு பெறுகிறது. ஏறுமயில் ஏறுவிளையாடு முகம் ஒன்று ஈசனோடு ஞானமொழி பேசுமுகம் ஒன்று குன்றுருவ வேல் வாங்கி நின்று ஒன்று சூரனை வதைத்த முகம் ஒன்று வள்ளியை மணபுறிய வந்த முகம் ஒன்று ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும் ஆதி அருணாச்சல மூர்த்தி அமர்ந்த பெருமானே…!!! என்று உணர்ச்சி பொங்க அப்பன் […]