ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையோடு மகர விளக்கு பூஜையும் மிக பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஜயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30ம் தேதி திறக்கப்பட்டது.திறக்கப்பட்ட அன்று முதல் சுவாமி ஐய்யப்பனுக்கு பல்வேறு விசேஷ பூஜைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜையானது நாளை மாலை 6.35 மணிக்கு தொடங்குகிறது.இந்த நிகழ்வில் மகரவிளக்கு பூஜையின்போது சபரிமலையில் அமைந்துள்ள பொன்னம்பல […]
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைதேரோட்டமானது வருகின்ற 20 தேதி நடக்க உள்ளது.மேலும் இதற்காக நேற்றே கொடியேற்றும் விழா வெகு சிறப்பாக நடந்தது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தைத்தேர்திருவிழாவானது நேற்று சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது.இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வருகின்ற 22 ம் தேதி வரையிலான 11 நாட்கள் வெகுவிமரிசையாக இந்த திருவிழாவானது நடைபெறுகிறது. மேலும் விழாவின் […]
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் இரண்டரை லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட இருப்பதையொட்டி, குமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோயிலில் விஷேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டு, இரண்டரை லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
தாங்கள் நினைத்ததை சாதித்தது முதலமைச்சர் பினராயி விஜயனின் தரம் தாழ்ந்த செயல் என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறுகையில், 2 பெண்களை ரகசியமாக பாதுகாத்து, தாங்கள் நினைத்ததை சாதித்தது முதலமைச்சர் பினராயி விஜயனின் தரம் தாழ்ந்த செயல் ஆகும். சபரிமலை கோவிலில் பரிகார பூஜை மேற்கொண்ட தந்திரியின் நடவடிக்கையை மனப்பூர்வமாக வரவேற்கிறேன் என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் தீர்ப்புக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் உச்ச தீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த இயலாத நிலையில் கேரள அரசு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இளம்பெண்களை அனுமதிக்க வலியுறுத்தியும், வழிபாட்டில் சீர்த்திருத்தங்களை மக்கள் ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், கேரளாவில் மகளிர் மனித சுவர் அதாவது ‘வனிதா மதில்’ போராட்டம் நடத்தப்பட்டது.அது குறித்து ஒரு தொகுப்பை பார்ப்போம்… மாற்றத்தை நோக்கி: ஒரு […]
பெண்கள் தரிசனம் செய்ததை அடுத்து சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலில் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமுல்படுத்த முயன்ற போது அதை தடுக்கும் விதமாக கலவரத்தை செய்யும் முயற்சியில் எடுபடது RSS போன்ற சங்பரிவார அமைப்புகள்.RSS இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்த பெண்களை தடுத்து நிறுத்தி தகராறு செய்து […]
அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலில் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமுல்படுத்த முயன்ற போது அதை தடுக்கும் விதமாக கலவரத்தை செய்யும் முயற்சியில் எடுபடது RSS போன்ற சங்பரிவார அமைப்புகள்.RSS இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்த பெண்களை தடுத்து நிறுத்தி தகராறு செய்து திருப்பி அனுப்பி வைக்கும் முயற்சியில் கேரளாவில் பல்வேறு மத வெறி […]
ஹாஜி அலி தர்கா எனும் முஸ்லீம் ஆன்மீக தலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பெண்கள் அனுமதிக்கப்பட்டனர் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், சபரிமலை கோயிலில் நெரிசலை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் மற்றும் திருவோண பண்டிகையின் போது நடை திறக்கப்பட்டு வருகிறது. இது உதவிகரமான நடைமுறை மாற்றம் . அது குறித்து யாருக்கும் மாற்று கருத்து ஏற்படவில்லை . பக்தர்கள் தங்கள் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்க்காக சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை நடைபெற இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் டிராக்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து , மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவிலின் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி இளம் பெண்கள் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் […]
ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகாசமாதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஷீரடி சாய்பாபா உருவம் பதித்த சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. பொற்றையடியில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகாசமாதி நூற்றாண்டுவிழா நடைபெற்றது. இதனையொட்டி சாய் பாபா உருவம் பதித்த சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வட்டார முதன்மை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சம்பத் தலைமை வகித்து சிறப்பு தபால் உறையை வெளியிட, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற […]
ஆரணியில் உள்ள ஸ்ரீஅறம் வளர்நாயகி சமேத ஸ்ரீகயிலாசநாதர் கோயிலில் மார்கழி மாத பிரதோஷ விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அறம்வளர்நாயகி சமேத கயிலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அடுத்தபடியாக பெரிய கோவிலாக விளங்கி வருகிறது. ஸ்ரீ அறம்வளர்நாயகி சமேத கயிலாசநாதர் கோவிலில் மார்கழி மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் பார்வதி மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் மஞ்சள் […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது. மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷம், மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமாவாசைக்கு, முன் தினத்தன்று வரும் பிரதோஷ திருவிழா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, பெரிய நந்தி பகவானுக்கு விபூதி அபிஷேகம், சந்தன அபிஷேகம், பால், தயிர் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நந்தி பகவானின் அருளைப் பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில் பொம்மைகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது இயேசு கிறிஸ்து மாட்டு தொழுவத்தில் பிறந்ததை நினைவு கூறும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து வழிபடுவார்கள். இதனை முன்னிட்டு விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை பகுதியில் பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 13 பொம்மைகள் உள்ள ஒரு செட்டின் விலை ரூபாய் 750 முதல், […]
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஆந்திர ஆளுநர் நரசிம்மன் ஆய்வு மேற்கொண்டார். வைகுண்ட வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இன்று இரவு 12 மணிக்கு மேல் திறக்கப்படும் சொர்க்கவாசல் 19 ம் தேதி நள்ளிரவு வரை இரண்டு நாட்கள் திறந்திருக்கும். இந்த இரண்டு நாட்களிலும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கும் சொர்க்கவாசல் பிரவேசத்திற்காகவும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என்று […]
மார்கழி மாதம் நேற்று பிறந்ததையொட்டி அதிகாலையிலேயே ஏராளமானோர் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாக மார்கழி பார்க்கப்படுகிறது.இது வருடத்தின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதமானது தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் அதிகாலையிலே எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி வீட்டின் வாசலில் வண்ணக் கோலம் இட்டு இறைவனை வழிபாடு செய்வது வழக்கம் அது மட்டுமல்லாமல் திருப்பாவை,திருவெம்பாவை இசைக்கப்படும் .மேலும் கிருஷ்ண பராமாத்மா மாதங்களின் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் […]
வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் 9-ம் நாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ நம்பெருமாள், முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா மார்கழி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து திருமொழித் திருவிழா கடந்த 8-ம் தேதி தொடங்கியது. பகல்பத்து விழாவின் 9-ம் நாளில், ஸ்ரீ நம்பெருமாள், […]
உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 6 தீர்த்த குளங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு அதில் பக்தர்கள் புனித நீராடும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி பயன்பாட்டின் இல்லாமல் இருந்த 6 தீர்த்த குளங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று 6 தீர்த்த குளங்களும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மொத்தம் 22 தீர்த்த குளங்கள் உள்ளது. ஆனால் அமாவாசை மற்றும் இதர நாட்களில் பக்தர்கள் வருகை […]
வருடம் தோறும் மார்கழி என்றாலே அதில் சிறப்பாக கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா இந்தாண்டு வரும் 18 தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக கொண்டாடப்படுகிறது இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.அதன்படி இந்த ஆண்டுக்கான சொர்க்கவாசல் வருகிற 18 ந்தேதி செவ்வாய்க்கிழமை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மதுரையில் கள்ளழகர் கோவிலும் இதே நாளில் சொர்க்கவாசல் திறக்கப்பட […]
திருச்சானூர் பதமாவதி தாயார் கோவிலில் பஞ்சமி திதியையொட்டி இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடந்தது. திருச்சானூர் பதமாவதி தாயார் கோவிலில் பஞ்சமி திதியையொட்டி இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தில் புனித நீராடினர். திருச்சானூர் உள்ள அலமேலுமங்காபுரத்தில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கடந்த 4 தேதி வெகு சிறப்பாக தொடங்கியது.இந்த பிரம்மோற்சவம் இன்று பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவு பெறுகிறது. இன்று நிறைவு பெறும் கார்த்திகை மாத […]
கார்த்திகை பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது.திருப்பதி திருச்சானூரில் உள பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்ச விழா நடந்து வருகிறது.இந்த விழாவின் 7 ம் நாளாகிய நேற்று முன்தினம் மாலை அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் அங்கு உற்சவராக இருக்கும் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்த நிலையில்இதனை தொடர்ந்து அவருக்கு என்று உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. இந்நிலையில் சரியாக இரவு 8 மணி முதல் 11 மணி வரை தாயார் […]