ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்ப காலம் என்பது மிக மகிழ்ச்சியான உன்னதமான காலம் எனலாம். ஆனால் பலருக்கும் ஏற்படும் சந்தேகங்களில் ஒன்று எத்தனை மாதங்கள் வரை கோவிலுக்கு செல்லலாம் என்றும் பெரியவர்கள் ஏன் கோவிலுக்கு செல்ல கூடாது என கூறுகிறார்கள் என்பதைப் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.. பெரியவர்கள் ஏன் கர்ப்ப காலத்தில் கோவிலுக்கு செல்லக்கூடாது எனக் கூறினார்கள் தெரியுமா? முற்காலத்தில் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் நீண்ட தூரமும் செல்ல வேண்டும் மேலும் செல்லும் வழிகள் […]
மாசி மாதம் 7ம் தேதி [பிப்ரவரி 19, 2024] இன்றய ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று சோர்வு மற்றும் கவலைகள் ஏற்படும் , வேலையில் சற்று கவனம் தேவை .துணையுடன் சகஜமாக அனுசரித்து செல்வது நல்லது. இன்று தேவையற்ற செலவு ஏற்படலாம், உடல்நிலையில் கவனம் தேவை உடற்பயிற்சி செய்வது நல்லது. ரிஷபம்: இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் உங்கள் உடன் பிறந்தவர்களுடன் சில பிரச்சனைகள் இருக்கும்பணியில் ஏற்றம் இறக்கம்காணப்படும் .உங்கள் துணையுடனான உறவில் […]
மாசி மாதம் 6ம் தேதி [பிப்ரவரி 18, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று சில அசவுரியங்களை சந்திக்க நேரும். திட்டமிட்டு செயலாற்றினால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். அதிக பணிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் இன்று சச்சரவு ஏற்படும். தேவையில்லாத செலவுகள் செய்ய நேரிடலாம் கண் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ரிஷபம்: இன்று புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டியது அவசியம். பணிகளைச் செய்யும் போது திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்கள் துணையுடன் […]
நம் செய்யப்படும் முக்கிய நிகழ்ச்சிகளான திருவிழாக்கள், புதுமனை புகுவிழா, திருமணங்கள் போன்றவற்றை வளர்பிறையில் தான் செய்ய வேண்டும் என பெரியோர்கள் கூறுவார்கள் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். வளர்பிறையின் சிறப்புகள் வளர்பிறையில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களும் வளர்ந்து கொண்டே இருக்கும். திருமணங்கள் செய்கிறார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கை வளமாக இருக்கும். புதிதாக ஏதேனும் தொழில் தொடங்குகிறார்கள் என்றால் அந்தத் தொழில் வளர்ச்சி அடையும் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால் வளர்பிறை காலத்தில் உயிர்ப்பு […]
மாசி மாதம் 5[ பிப்ரவரி 17,2024]ஆம் தேதிக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று உங்கள் தைரியம் குறைந்து காணப்படும், உங்கள் சக பணியாளர்களிடம் சில பிரச்சனைகள் உருவாகலாம். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை வேண்டும். பணப்புழக்கம் இன்று குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம்: இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் சமநிலையான அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும். […]
செல்வங்கள் 16 எனக் கூறப்பட்டாலும், அதில் மிக முக்கியமானது குழந்தை செல்வம் தான். இது ஒரு வரமாகவே கருதப்படுகிறது. இந்த வரம் கிடைத்தாலும் அது பாதுகாப்பாய் நம் கைகளுக்கு வர பல சிக்கல்கள் இருக்கும். அந்தச் சிக்கலை போக்க ஓர் அதிசய ஆலயமாக கர்ப்பரட்சாம்பிகை கோவில் கூறப்படுகிறது. இக்கோவிலின் சிறப்பு மற்றும் பரிகாரங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். குழந்தை பேருக்காக மருத்துவத்துறை அதிக அளவில் வளர்ச்சி அடைந்தாலும் சில நேரங்களில் மருத்துவ சக்தியே தெய்வ சக்தியின் […]
மாசி மாதம் 4ம் தேதி [பிப்ரவரி 16, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று மகிழ்ச்சியான மனநிலையை வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய நாளில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். துணையுடன் ஆன உறவில் உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்கவும். இன்று பணவரவு ஏற்பட்டாலும் தேவையில்லாத செலவுகளும் ஏற்படலாம். மூக்கு, வாய், தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம்: இன்றைய நாளில் உற்சாகத்தை கடைபிடிக்க வேண்டும். பொறுமையை கடைப்பிடிப்பது மூலம் பணிகளை திறமையாக […]
தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு அது எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றியும் எது உயர்ந்தது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தானம் பலனை எதிர்பார்த்து ஒருவருக்கு கேட்காமலே நாம் செய்வது தானமாகும்.உதாரணமாக இந்த தானம் செய்தால் தனக்கு இவ்வளவு பலன் கிடைக்கும் என அறிந்து செய்வதாகும் . தர்மம் தர்மம் என்பது ஒருவர் கேட்டு நாம் உதவி செய்வதும் அதற்கு எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் செய்வதும் ஆகும்.அதாவது வலதுகையில் கொடுப்பது […]
நாம் தெரிந்தோ தெரியாமலோ அல்லது சூழ்நிலையின் காரணத்தினாலோ பல பாவங்களை செய்திருப்போம் அதை போக்க இந்த ரதசப்தமியை பயன்படுத்திக் கொள்ளலாம்.பிப்ரவரி மாதம் 16 2024 அன்று ரதசப்தமி வர இருக்கிறது. இந்நாளின் சிறப்பு மற்றும் பாவம் போக்கும் குளியல் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ரதசப்தமியின் சிறப்பு ரதசப்தமியை சூரிய ஜெயந்தி எனவும் கூறுவர், சூரிய பகவானுக்கு உரிய மிக முக்கிய தினங்களில் ரதசப்தமியும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் […]
நேர்த்திக்கடன் என்பது ஒரு பக்தன் இறைவனிடம் தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றி விட்டால் தங்களுக்கு இதை செய்கிறேன் என பிரார்த்தனை செய்வதாகும், இதை சில காரணங்களால் மறந்து விடுகிறோம் அல்லது நாம் இருக்கும் இடத்தை விட்டு வேறு ஒரு நாட்டிற்கோ அல்லது இடத்திற்கோ சென்று விட்டோம் என்றால் அந்த நேர்த்திக்கடனை எவ்வாறு செலுத்துவது மற்றும் மறந்து விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கும்… நேர்த்திகடன் ஒவ்வொருவரின் மனப்பக்குவத்தை பொறுத்து மாறுபடும். […]
ஒரு சிலர் வறுமையின் பிடியில் சிக்கி வெளிவர முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள் அவர்கள் நாளை வரவிருக்கும் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதன் சிறப்புகளையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மாசி மாதம் 1ந் தேதி( பிப்ரவரி 13,2024) நாளை விஷ்ணுபதி புண்ணிய காலம் வர இருக்கிறது. இந்த காலம் வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே வரும். இந்நாளில் விஷ்ணுவையும், மகாலட்சுமியையும் ,கருட பகவானையும் பூஜை செய்ய உகந்த காலமாக கருதப்படுகிறது. விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் […]
இன்று பலரும் கால்களில் கருப்பு கயிறு கட்டுகின்றனர் இது சரியா மற்றும் முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என்றும் ஒரு சிலருக்கு கருப்பு நிறம் சேராது என்று கூறுவார்கள் அவர்கள் என்ன செய்வது போன்ற சந்தேகங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.. எத்தனை வயதானாலும் இந்த கண் திருஷ்டி சுலபமாக ஒருவரை தாக்கி விடும். இந்த திருஷ்டியை போக்க பல வழிகள் உள்ளது அதில் ஒன்றுதான் இந்த காலில் கருப்பு கயிறு கட்டும் முறை. கருப்பு கயிறு கட்டுதலின் […]
திருநீறு சைவத்தின் ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல் ஒரு அங்கமாக கருதப்படுகிறது .சைவத்தில் அங்கங்கள் என்றால், பஞ்சாட்சன மந்திரம் ருத்ராட்சம், விபூதி. இதில் மிக முக்கியமாக கருதப்படுவது திருநீறு இது பல வகைகளில் நன்மைகளை பெற்று தரும், அது என்னவெல்லாம் என்றும் குளிக்காமல் திருநீறு வைக்கலாமா என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம். திருநீருக்கு நிறைய பெயர்கள் உண்டு .அதில் விபூதி என்றால் வி என்பது மேலான என்பதையும் பூ என்றால் ஐஸ்வரியம் என்பதையும் குறிக்கும், மேலான ஐஸ்வர்யத்தை […]
தை மாதம் 28[பிப்ரவரி 11,2024]ந் தேதிக்கான இன்றய ரசிப்பலன்களை இங்கு காணலாம். மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் செய்யும் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்ல பிணைப்பு வளரும். எதிர்பார்த்த வகையில் பண வரவு இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. ரிஷபம்: இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள், மேலும் முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாளாக இருக்கும். பணிகளில் மேல் அதிகாரிகளின் பாராட்டு […]
வாஸ்து என்பது ஒரு கட்டிடத்திற்கான உயிரோட்டமாகும். முந்தைய காலத்தில் வீடு கட்டுவதற்காக ஜாதகம் எழுதி அதற்கான ஆயுட்காலமும் எழுதப்பட்டது இது காலப்போக்கில் மாறி வாஸ்து மட்டுமே பார்க்கப்படுகிறது. பஞ்சபூதங்களின் சரியான சேர்க்கையே வாஸ்துவாக அமைகிறது. இந்த பஞ்சபூதங்களும் ஒரு வீட்டில் அமைந்து விட்டால் அந்த வீட்டில் அனைத்துமே சரியாக இருக்கும். இதில் ஒன்று சரியில்லை என்றாலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் உதாரணமாக நீரினால் ஒரு பிரச்சனை என்றால் அந்த வீட்டில் பண வரவு பாதிக்கப்படும். நீரை நாம் […]
தை மாதம் 27 [பிப்ரவரி 10,2024]இன்றைய நாளுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம் . மேஷம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும் .இன்று எடுக்கப்படும் முடிவுகள் நன்மை அளிக்கும். உங்கள் பணியை விரும்பி செய்வீர்கள். உங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவரின் விருப்பப்படி நடந்து கொள்வீர்கள். இன்று பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நீங்கள் மன உறுதியுடன் இருப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ரிஷபம்: இன்றைய நாள் உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் […]
தை மாதம் 26 ஆம் தேதி பிப்ரவரி9, 2024 இன்றைய நாளுக்கு உண்டான ராசி பலன்களை இங்கே பார்க்கலாம். மேஷம் இன்று உங்களிடம் நம்பிக்கையும் உறுதியும் நிறைந்திருக்கும், இதனால் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும் .ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும். ரிஷபம் இன்று நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. நீங்கள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி கிடைக்கும். உங்கள் துணையுடன் […]
சகுனம் என்பது ஒரு முன் அறிகுறி ஆகும், இது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது இதை ஒரு சிலர் மூடநம்பிக்கை என்றும் கூறுவர். சகுனத்தில் நல்ல சகுனம், கெட்ட சகுனம் என உள்ளது இவற்றைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம் முன்னோர்கள் , குலதெய்வங்கள் ,தேவதைகள் என, நல்ல சக்திகள் நமக்கு நடக்கவிருக்கும் தீயவற்றை முன்கூட்டியே உணர்த்தக்கூடியது சகுனம். அதாவது ஒரு ஒரு மணி நேரத்தில் நடக்க இருக்கும் விபத்தை முன்கூட்டியே அறிவுறுத்தி அதை […]
9- 2 -2024 அன்று தை அமாவாசை வர இருக்கிறது. மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. தை அமாவாசையின் சிறப்பு, துவங்கும் நேரம் முன்னோர்களுக்கு படையல் போடும் நேரம், தர்ப்பணம் கொடுக்கும் நேரம் ,அன்று என்னெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தை அமாவாசையின் சிறப்பு ஒரு ஆண்டின் மூன்று அமாவாசைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை. இதில் தற்போது […]