Devotion– கால சர்ப்ப தோஷம் நீங்க நாக சதுர்த்தி அன்று வழிபடும் முறை மற்றும் தேதி ,நேரம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆடி மாதம் என்றாலே ஆலய வழிபாட்டிற்கு உகந்த மாதமாக விளங்குகிறது .இந்த மாதத்தில் பல வழிபாடுகளும் பூஜை முறைகளும் இருந்தாலும் முக்கியமான வழிபாடாக கருதப்படுவது நாகசதுர்த்தி ஆகும். இந்து சமயத்தில் பாம்பிற்கும் கருடனுக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பிரம்மதேவனின் மகனான கஸ்யப்பருக்கு நான்கு மனைவிகள். இவர்களின் ஒரு மனைவியான கத்ரி என்பவருக்கு பிறந்தவர் தான் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால் அவருடைய தாய் தீயில் விழுந்து இறக்குமாறு சாபமிட்டார். அதன்படி மன்னன் ஜனமே ஜெயன் நடத்திய அக்னியாகத்தில் பல நாகங்கள் விழுந்து இறந்தன. இதைப் பார்த்த அஸ்திகர் அந்த யாகத்தை தடுத்து சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு சாப விமோசனம் பெற்ற நாள் தான் நாக சதுர்த்தியாகும்.
ஆடி மாதம் வளர்பிறை தான் நாக சதுர்த்தி என கடைபிடிக்கப்படுகிறது. பாம்பு என்றாலே படை நடுங்கும் அது போல் பாம்பு தோஷங்களான கால சர்ப்ப தோஷம், ராகு ,கேது தோஷங்கள் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால் திருமண தடை.,குழந்தை பாக்கியத்தில் தடை, காரியத்தடை,முன்னேற்றமின்மை போன்றவை ஏற்படும். இந்த தோஷங்கள் நீங்க நாக சதுர்த்தி அன்று விரதம் இருந்து நாக தெய்வத்தை வழிபட்டால் தோஷங்கள் அகலும் . ஏதேனும் ஒரு ஜென்மத்தில் நாமோ அல்லது நம் முன்னோர்களோ தெரிந்தோ தெரியாமலோ பாம்பிற்கு தீங்கு விளைவித்திருந்தால் அந்த தோஷம் பல தலைமுறைக்கும் தொடரும். இதற்கு மன்னிப்பு கேட்க இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு நாகசதுர்த்தி ஆகஸ்ட் 7 ம்தேதி புதன்கிழமை இரவு 9; 52 க்கு தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 11; 47 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் வழிபாடுகளை செய்ய ராகு காலத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.
அன்றைய நாளில் கோவிலுக்கு சென்று கல்லால் ஆன நாகத் திருமேனிகளுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்து மஞ்சள் வைத்து வாசனை மலர்களான நாகலிங்கம் பூ ,மல்லிகை பூ போன்ற மலர்களை சாற்றி வெல்லம் மற்றும் எள் கலந்து வைத்து அல்லது அரிசி மாவு ,பால் இவற்றில் ஏதேனும் ஒன்றை நெய்வேத்தியமாக வைத்து பூஜை செய்யலாம். இவ்வாறு பூஜை செய்யும் போது நானோ என் முன்னோர்களோ தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை மன்னித்து அருளும் என்று கூறவேண்டும்.சதுர்த்தி விநாயகருக்கு உரிய நாள் என்பதால் இந்த நாளில் விநாயகரையும் வழிபட வேண்டும் .
ஆகவே இந்து சமயத்தில் பல வழிபாடுகள் உள்ளது . நாக தோஷம் இருப்பவர்கள் இந்த நாளை பயன்படுத்தி உங்களின் தோஷங்கள் நீங்க வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…